மீண்டும் களத்தில் இறங்கிய விஜே அர்ச்சனா – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் புகழ் பெற்றவர் விஜே அர்ச்சனா. அவருக்கு சமீபத்தில் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனால் சில மாதமாக படப்பிடிப்புகளில் அவர் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள உள்ளதாக இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
விஜே அர்ச்சனா:
தமிழ் சின்னத்திரையில் பல வருடங்களாக தொகுப்பாளராக விஜே அர்ச்சனா பணியாற்றி கொண்டிருந்தாலும், ரசிகர்களின் மனதில் என்றுமே இவருக்கு தனி இடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. தொகுப்பாளர்கள் புதுசு புதுசாக பலபேர் அறிமுகமாகி கொண்டிருந்தாலும் இவருடைய பெயரை சொன்னதும் அனைவருக்கும் நினைவிற்கு வந்துவிடும். பல ஆண்டுகளாக நல்ல பெயரில் இருந்தாலும் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மூலமாக பல நெகடிவ் கமெண்ட்களை பெற்றார். மேலும் அவரும் அவளது மகளும் இணைந்து யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
அதில் அவருடைய பாத்ரூம் டூர் வீடியோ மூலமாக பல விமர்சனங்களை பெற்றார். பல விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த அவருக்கு சமீபத்தில் மூளையில் சிறிய அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதனால் அவர் அனைத்து நிகழ்ச்சிகளில் இருந்தும் சிறு ஓய்வு பெற்றார். தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு அவர் சிகிச்சையில் இருந்தார். தற்போது உடல் நிலை சீராகிவிட்டதால் மீண்டும் அவர் களத்தில் இறங்கியுள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் செப்.13ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
அதில் ஐ ஆம் பேக் என்று தலைப்பு கொடுத்துள்ளார். விளம்பர படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட வீடியோ என்று அவர் விளக்கியுள்ளார். அவர் மீண்டும் குணமடைந்து திரும்பி உள்ளதால் அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இனிமேல் அவரை வழக்கம் போல அனைத்து நிகழ்ச்சிகளிலும் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.