மே 28 – 31ம் தேதிகளில் ஆன்லைன் முறையில் நுழைவுத்தேர்வு – விஐடி பல்கலை அறிவிப்பு!!!

0
மே 28 - 31ம் தேதிகளில் ஆன்லைன் முறையில் நுழைவுத்தேர்வு - விஐடி பல்கலை அறிவிப்பு!!!
மே 28 - 31ம் தேதிகளில் ஆன்லைன் முறையில் நுழைவுத்தேர்வு - விஐடி பல்கலை அறிவிப்பு!!!
மே 28 – 31ம் தேதிகளில் ஆன்லைன் முறையில் நுழைவுத்தேர்வு – விஐடி பல்கலை அறிவிப்பு!!!

கொரோனா பரவல் காரணமாக விஐடி பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள் மே 28ம் தேதி முதல் ஆன்லைன் முறையில் நடத்துவதாக பல்கலை நிர்வாகம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது.

நுழைவுத்தேர்வுகள்:

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை  நாடு முழுவதும்  அதிக வேகத்தில் பரவுவதால் பாதிப்புகள் புதிய உச்சத்தில் உள்ளது. இதனால் மத்திய அரசு மாநிலங்களில் உள்ள நிலையைப் பொறுத்து கட்டுப்பாடுகளை விதிக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. நாடு முழுவதும் இதனால் பல முக்கிய தேர்வுகளான ஜேஇஇ, முதுகலை நீட் போன்ற தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா புதிய கட்டுப்பாடுகள் – இன்று முதல் அமல்!!

மேலும், பல மாநிலங்களின் பல்கலைக்கழக, கல்லூரி தேர்வுகள், பள்ளி பொதுத்தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பல கல்வி வாரியங்கள் தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இதேபோல் விஐடி பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்துவதாக செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதில், கொரோனா தாக்கத்தின் காரணமாக  விஐடி 2021 நுழைவுத்தேர்வு வரும் மே 28 முதல் 31 வரை ஆன்லைன் முறையில் நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பம் பூர்த்தி செய்ய  மே 20ம் தேதி கடைசி நாளாகும். இது தொடர்பான அதிக தகவல்களை www.vit.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!