இனி ஆந்திராவின் புதிய தலைநகர் ‘விசாகப்பட்டினம்’ தான் – முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தகவல்!
ஆந்திரப்பிரதேசத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் மாநிலத்தின் தற்போதைய தலைநகரை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தலைநகர் மாற்றம்:
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் மாநிலத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல் சிறப்பு நலத்திட்டங்கள் பலவற்றையும் செய்து மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். இதனால் அவரது ஆட்சிக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு நிலவி வருகிறது. இந்நிலையில், வரும் மார்ச் 3 மற்றும் 4ம் தேதிகளில் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனால் மாநில அரசின் சார்பாக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் முக்கிய வழித்தட ரயில்கள் முழுவதுமாக ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
இன்று, நடைபெற்ற மாநாட்டிற்கான ஆயத்த கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெடி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, உலக முதலீட்டாளர்கள் அதிக அளவில் மாநிலத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக, மாநிலத்தின் தலைநகர் தற்போது அமரவாதியாக இருக்கும் நிலையில், இனி வரும் மாதங்களில் விசாகப்பட்டினம் தான் மாநிலத்தின் தலைநகராக மாற்றப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதனால், விசாகப்பட்டினத்தில் தலைநகர் மாற்றத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.