T20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோஹ்லி விலகியது ஏன்? வெளியான பரபரப்பு தகவல்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து விதமான போட்டிகளிலும் கேப்டனாக பதவி வகித்து வந்த விராட் கோஹ்லி உலகக்கோப்பை தொடருக்கு பின் T 20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், பதவி விலகல் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
பதவி விலகல்
பொதுவாக எந்தவொரு விளையாட்டாக இருந்தாலும் ஒரு அணியின் கேப்டன் பதவியை வகித்து வருவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அது எந்த வகையான விளையாட்டு ளுக்கும் பொருந்தும். அதாவது ஒரு அணியின் கேப்டன் பதவிக்கு சில முக்கிய பொறுப்புகள் இருக்கிறது. குறிப்பாக அணியில் ஏற்படும் வெற்றி, தோல்வி உள்ளிட்ட அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் அந்த கேப்டன் தான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். அதிலும் வெற்றியை பொறுமையுடன் கையாளுவதும், தோல்வியை மனமுவந்து ஏற்றுக்கொள்வதும், விமர்சனங்களையும் பெற்றுக்கொள்வதும் ஒரு சிறந்த கேப்டனுக்கான தகுதியாகும்.
IPL திருவிழா 2021 : டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாக ரிஷப் பன்ட் நியமனம்!
இப்படி எல்லா வித பொறுப்புகளையும் சுமந்து வந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி T 20 உலகக்கோப்பை போட்டிக்கு பின், T 20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ரசிகர்களால் ரன் மெஷின் என்று அழைக்கப்படக்கூடிய விராட் கோஹ்லி, சர்வதேச T 20 கிரிக்கெட்டில், இதுவரை 90 போட்டிகளில் விளையாடி 3149 ரன்களை குவித்துள்ளார். இவற்றில் கேப்டனாக 45 போட்டிகளில் விளையாடிய அவர் 27 போட்டிகளில் வெற்றியை ருசித்துள்ளார். மேலும் 14 போட்டிகள் தோல்வியிலும், 4 போட்டிகள் ட்ராவிலும் முடிந்துள்ளது.
அந்த வகையில் T 20 கேப்டனாக கோஹ்லி பெற்ற வெற்றி சதவிகிதம் 65.11 ஆகும். குறிப்பாக சர்வதேச T 20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன்கள் பட்டியலில் 4 ஆவது இடத்தையும் இவர் வகித்துள்ளார். அதிலும் கேப்டனாக பதவி வகித்த போது அதிவேகமாக 1000 ரன்களை எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையும் இவரை சாரும். சமீபகாலமாக கேப்டன் கோஹ்லியின் ஆட்டத்தில் ஒரு தடுமாற்றம் நிலவி வருகிறது. அதிலும் சர்வதேச கிரிக்கெட்டில் இவர் சாத்தான் அடித்து 2 ஆண்டுகள் கடந்துள்ளது. குறிப்பாக அவர் விளையாடிய கடைசி 54 இன்னிங்சில் அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
மேலும் ICC தொடர்களில் கோஹ்லி தலைமையில் இந்திய அணி ஒரு கோப்பையை கூட இதுவரை வெல்லவில்லை. இதனால் T 20 உலகக்கோப்பை தொடரிலும், இந்திய அணியின் ஆலேசகராக டோனி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்படி அனைத்து விதமான போட்டிகளிலும் கேப்டனாக இருக்கும் கோஹ்லிக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தனது பொறுப்பில் இருந்து அவர் விலகுவதாகவும் கூறப்பட்டுள்ளது. கோஹ்லியை தொடர்ந்து இந்திய அணியின் T 20 கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா நியமிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் கோஹ்லி விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கோஹ்லியின் இந்த பதவி விலகல் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வினோத் காம்பளி கூறுகையில், ‘உலக கோப்பைக்கு தொடருக்கு பிறகு இந்திய T 20 அணிக்கு ரோகித் ஷர்மா கேப்டனாக இருப்பார் என நினைக்கிறேன். IPL போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிப்பாதையில் வழிநடத்தி செல்லும் அவர் இதற்கு தகுதியானவர்.
IPL திருவிழா 2021: முதல் கோப்பையை உச்சி முகரும் வேட்கையில் பஞ்சாப் கிங்ஸ் படை!!
இனி கோஹ்லி எந்தவித அழுத்தமும் இல்லாமல் முழு சுதந்திரத்துடன் விளையாட வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இப்போது இந்திய அணியின் புதிய கேப்டன் பதவிக்கு பொருத்தமானவராக கே.எல்.ராகுல் இருக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. ஏனென்றால் IPL மற்றும் 50 ஓவர் போட்டிகளில் கே.எல்.ராகுல் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார். அதனால் அவருக்கு துணை கேப்டன் பதவியை வழங்கலாம் என சில கருத்துக்கள் வெளியாகியுள்ளது. இதுவரை T 20 அணியின் கேப்டனாக விராட் கோஹ்லி கலந்து கொண்ட போட்டி 45, அதில் வெற்றி 27, தோல்வி 14, ட்ரா 2 ஆகும். IPL கேப்டனாக கோஹ்லி கலந்து கொண்ட போட்டி 132, வெற்றி 60, தோல்வி 65 மற்றும் 4 போட்டிகள் கைவிடப்பட்டது என்பது கூடுதல் தகவல்.