டி20 அணியின் இந்திய கேப்டன் பதவியில் இருந்து விலகல் – விராட் கோலியின் அதிர்ச்சி முடிவு!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தான் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அதிகாரபூர்வ அறிக்கையினை வெளியிட்டுள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்துள்ளனர்.
விராட் கோலி:
விராட் கோலி முதன்முதலில் 2006ம் ஆண்டு முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் டெல்லி அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். 19 வயதிற்கு கீழானவர்களுக்கான 2008 உலக கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை ஏற்று வெற்றி பெற்று தந்தவர். 2011ம் ஆண்டின் உலக கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டார். 2014 ஆம் ஆண்டில் மகேந்திரசிங் தோனி ஓய்வு பெற்ற பிறகு இவர் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இட ஒதுக்கீடு – கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!
விராட் கோலி அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும், குறைந்த இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த வீர்ர் என்ற சாதனை படைத்துள்ளார்.இது போன்ற பல சாதனைகளையும் படைத்துள்ளார். இதற்காக அரசின் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில், விராட் கோலி தற்போது ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2021 போட்டிகள் முடிந்த பிறகு இந்திய அணியின் டி 20 அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக, வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில், கடந்த 9 வருடங்களாக மூண்டு பிரிவுகளிலும் விளையாடி வருகிறேன்.
TN Job “FB Group” Join Now
மேலும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியை வழிநடத்த முழுமையாக தயாராக இருக்க எனக்கு நானே இடம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். கேப்டனாக இருந்த காலத்தில் எனது முழு பங்களிப்பையும் வழங்கியுள்ளேன். டி 20 கேப்டனுக்கு தேவையான உதவிகளை நான் தொடர்ந்து செய்வேன், மேலும் டி 20 அணிக்காக பேட்ஸ்மேனாக தொடர்ந்து பங்கேற்பேன்.பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி மற்றும் அனைத்து அதிகாரிகளிடமும் தெரிவித்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் விராட் கோலியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.