தனது மகனுடன் முதல் ரம்ஜானை கொண்டாடிய ஆலியா & சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ!
தற்போது தான் ஆலியாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பிறகு முதல் ரம்ஜானை ஆலியா மற்றும் சஞ்சீவ் கொண்டாடியுள்ளனர். முதல் ரம்ஜான் என்பதால் குடும்பத்தில் உள்ள அனைவரும் பிரியாணி சமைத்து சாப்பிடும் படியான வீடியோ வைரலாகி வருகிறது.
ஆலியா:
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக பிரபலமானவர் தான் ஆலியா. இவர் தன்னுடன் ராஜா ராணி சீரியலில் நடித்து வந்த சஞ்ஜீவ்வை காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார். திருமணமாகி சில மாதங்களிலேயே ஆலியா கர்ப்பமானார். ஆலியாவிற்கு தற்போது ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. ஐலா பாப்பா பிறந்து சில நாட்களிலேயே மீண்டும் சீரியலில் இணைந்து கொண்டார். இதன் பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜாராணி சீசன் 2விலும் ஆலியா தான் நடிக்க ஒப்பந்தமானார்.
விஜய் டிவி ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் இருந்து விலகும் இயக்குனர் – ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்த தொடரில் நடித்து கொண்டிருந்த போதும் மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். ராஜா ராணி சீசன் 2 தொடரிலும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது கூட நடித்து வந்தார். பிரசவத்திற்காக பிரசவ நாளுக்கு கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு முன்பாகவே சீரியலில் இருந்து விலகினார். தற்போது ஆலியாவிற்கு ஒரு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பிறகு குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ராஜா ராணி தொடரில் மீண்டும் இணையப் போவதில்லை என கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று கூறினார்.
Exams Daily Mobile App Download
தற்போது ஆலியா தனது மகனுடன் நேரத்தை முழுக்க முழுக்க செலவிட்டு வருகிறார். அவ்வப்போது தனது மகனுடன் இருக்கும்படியான வீடியோக்களை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அர்ஷ் பிறந்த பிறகு முதல் ரம்ஜானை குடும்பத்தினர்கள் கொண்டாடியுள்ளனர். இந்த வருட ரம்ஜானை சிறப்பாக கொண்டாட வேண்டும் என குடும்பத்தில் உள்ள அனைவரையும் வரவழைத்து பிரியாணி சமைத்து சாப்பிட்டுள்ளனர். ஆலியா பிரியாணி சாப்பிடும் அழகை சஞ்சீவ் ரசிக்கும்படியான வீடியோவை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.