திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடும் பக்தர்கள் கவனத்திற்கு – வி.ஐ.பி டிக்கெட் விற்பனை!
ஆந்திர மாநில சுற்றுலாத்துறை சார்பில் சர்வதேச விமான நிலையத்தில் வி.ஐ.பி தரிசன டிக்கெட் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிக்கெட் விற்பனை:
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதங்களில் பக்தர்கள் வருகை மறுக்கப்பட்டது. சுவாமிக்கு பூஜைகள் கோயில் வளாகத்தில் உள்ள ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அதன் பிறகு அரசின் முயற்சியால் ஓரளவு கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கூட்டத்தை தவிர்க்கும் நோக்கில் முன்பதிவு அடிப்படையில் மட்டும் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கோவில் இணையதளம் வாயிலாக மாதந்தோறும் 300 ரூபாய் தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி முதல் அடுத்த மாதத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.
10ம் வகுப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு – அஞ்சல் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு அறிவிப்பு!
அந்த வகையில் 2022 ஜனவரி மாதத்திற்கான 300 ரூபாய் டிக்கெட் விநியோகம் கடந்த டிசம்பர் மாதமே தொடங்கியது. ஜனவரி மாதம் புத்தாண்டு மற்றும் ஏகாதேசி விழாவை முன்னிட்டு இணையதளத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கிய 20 நிமிடத்தில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தது. அதனை தொடர்ந்து கடந்த 13ம் தேதி அன்று திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பூஜைகள் சிறப்பாக பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் கடந்த நவம்பர் மாதம் மழை காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய வர வேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியது.
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து – அரசுக்கு முக்கிய கோரிக்கை!
மேலும் பக்தர்கள் வசதிக்காக முன்னதாக மலைப் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதால் எந்தவித பிரச்சனையும் இன்றி பயணிக்கலாம் என்று தேவஸ்தான அதிகாரி கூறியுள்ளார். அதனால் முன்பதிவு செய்து நவம்பர் மாதம் சுவாமி தரிசனம் செய்யாதவர்கள் வரலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை சார்பில் சர்வதேச விமான நிலையத்தில் வி.ஐ.பி தரிசன டிக்கெட் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விரைவில் டிக்கெட் விற்பனைக்காக சிறப்பு மையம் அமைக்கப்பட்டு ரூ.10,500 செலுத்தி பக்தர்கள் வி.ஐ.பி தரிசன டிக்கெட் பெறலாம்.