திருப்பதி செல்ல திட்டமிடும் பக்தர்கள் கவனத்திற்கு – விஐபி தரிசனம் ரத்து!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் மூன்று நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி:
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் கொரோனா பரவல் காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் மாதந்தோறும் ரூபாய் 300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் மூலம் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த முன்பதிவு டிக்கெட் இணையதளம் வாயிலாக மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி அடுத்த மாதத்திற்கான தரிசன டிக்கெட் விநியோகம் தொடங்கப்படும். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்து வரும் நிலையில் இலவச தரிசன நேரடியாக வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
உக்ரைனை விட்டு வெளியேறிய அதிபர் ஜெலன்ஸ்கி? மறுப்பு தெரிவித்து வீடியோ! இறுதி வரை போராடுவதாக ஆவேசம்!
அதன்படி திருமலையில் பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம் தங்கும் விடுதி,கோவிந்தராஜ சாமி மூன்று இடங்களில் தினசரி 10,000 இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து இனி வரும் காலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்து, நீக்கப்பட்டு பக்தர்கள் வழக்கம் போல தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தான அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அடுத்த மாதத்திற்கான (மார்ச்) 300 ரூபாய்க்கான தரிசன டிக்கெட் விற்பனை கடந்த 23ம் தேதி இணையதளத்தில் தொடங்கியுள்ளது.
ஏப்ரல் 10 முதல் மே 15ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு திட்டம்!
இந்த நிலையில் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் 3 நாட்கள் சிபாரிசு கடிதத்தில் ஒதுக்கப்பட்ட வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதன்படி வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று ஆகிய மூன்று நாட்களிலும் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது. மேலும் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு தரிசன நேரம் தினமும் 2 மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதனால் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.