மெரினாவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு! மீறினால் அபராதம்!
சென்னை மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறியும் பலர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றனர். இதனை தடுக்க சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பிளாஸ்டிக் தடை:
இந்தியாவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நாம் தினந்தோறும் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பைகளால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுகிறது. மேலும் இதனால் மண் வளம் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. அதனால் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. நாடு முழுவதும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி முதல் தடை விதிக்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதித்தது.
மேலும் இந்த பிளாஸ்டிக் தடையை மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியங்களும், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. மக்கள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் குப்பைகளால் நிலப்பரப்பிலும், நீர் நிலைகளிலும் அதாவது ஆழ்கடல் பரப்பிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பிளாஸ்டிக்கால் கடல் வாழ் உயிரினங்கள் இறக்கும் நிலை ஏற்படுகிறது. அதனால் தமிழகத்தில் உள்ள சென்னை மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் மாநில கல்வி கொள்கை? அமைச்சர் பேட்டி!
அதனால் கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் கடைகள், குப்பைகளை கொட்டும் நபர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மண்டல அளவிலான இந்த குழுவில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 16 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் மாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை கண்காணித்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபடும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்