விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!

0
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட அனுமதி - மாநில அரசு அறிவிப்பு!
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட அனுமதி - மாநில அரசு அறிவிப்பு!
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!

கொரோனா 2 ஆம் அலை தொற்றுக்கு மத்தியில் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தின விழாவை சில கட்டுப்பாடுகளுடன் கடைபிடிக்க அனுமதி அளித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுவதும் கொரோனா 3 ஆம் அலை தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவது தடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் அறிவுறுத்தல்களின் படி, மாநிலங்கள் தோறும் நடத்தப்படும் மதவிழாக்கள், கொண்டாட்டங்கள் அனைத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதே போல தமிழகத்திலும் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி தின விழாவை முன்னிட்டு பொது இடங்களில் மக்கள் சிலைகளை வைத்து வழிபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இது தவிர அன்னை வேளாங்கன்னி தேர் திருவிழாவிலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

IBM நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் பணி வாய்ப்புகள்! – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

இதனிடையே வரும் 10 ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை வைத்து மக்கள் வழிபடுவதற்கு சில நிபந்தனைகளை விதித்து கர்நாடகா மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பொது இடங்களில் விநாயகர் சிலைகளை 5 நாட்களுக்கு மட்டுமே வைத்திருக்க வேண்டும். இந்த சிலையின் உயரம் 4 அடி வரை மட்டுமே இருக்க வேண்டும். ரசாயனம் கலந்த சிலைகளுக்கு அனுமதி கிடையாது. வீடுகளில் வைக்கப்படும் சிலைகள் 2 அடியில் இருக்க வேண்டும்.

செப்.14 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

மேலும் பெங்களூரு, மைசூரு, ஹூப்ளி போன்ற நகரங்களில் ஒரு இடத்தில் மட்டுமே சிலையை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பந்தல்கள் 50 – 50 என்ற அளவில் இருக்க வேண்டும். கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது. விழா நடத்தும் குழுவில் உள்ள ஒவ்வொருவரும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மேலும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லாமல், அருகில் இருக்கும் நீர் நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!