அரசு & கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

0
அரசு & கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
அரசு & கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

விழுப்புரம் மாவட்டத்தில் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் திருத்தேர் விழா காரணமாக மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று (18.03.2021) ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

உள்ளூர் விடுமுறை:

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் திருத்தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த திருவிழா நடத்தப்படவில்லை.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா கொரோனா கட்டுப்பாடு விதிகளுடன் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் இன்று (18.03.2021) விமரிசையாக நடைபெற உள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்றவற்றிற்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை – பெற்றோர்கள் கோரிக்கை!!

மேலும் இந்த நாளில் அவசர அலுவலக பணிகளை கவனிக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களும் குறைந்த ஊழியர்களை கொண்டு இயங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் 03.04.2021 ஆம் தேதி சனிக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படும். இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்திடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!