தமிழகத்தில் ஜன.26ம் தேதி நடைபெறவிருந்த கிராம சபைக்கூட்டம் ரத்து – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ஜனவரி 26ம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்களை ரத்து செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கிராம சபை கூட்டம்:
தமிழகத்தில் கிராம சபை கூட்டம் இந்தியக் குடியரசு நாளான ஜனவரி 26ம் தேதி அன்றும், தொழிலாளர் நாளான மே 1ம் தேதி அன்றும் இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15ம் தேதி அன்றும் மற்றும் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி அன்றும் ஆகிய நான்கு நாட்களின் போது கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் நடத்தப்படுகிறது. மேலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக 2019ம் ஆண்டு மற்றும் கடந்த ஆண்டுகளில் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வருகிற ஜனவரி 26ம் தேதி அன்று கிராம சபை கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது.
தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
ஆனால் தற்போது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளான பால், பத்திரிகை, மருத்துவம், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் உணவகங்களில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது.
TNPSC குரூப் 4 & குரூப் 2, 2 A காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் திட்டம்!
அத்துடன் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற ஜனவரி 26ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற இருந்ததை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஏனெனில் ஒரு கிராமத்தில் 500 பேர் வாசித்தல் வந்தால் அங்கு நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் 50 பேர் முதல் கலந்து கொள்ளலாம். இவ்வாறு கூட்டம் கூடுவதால் தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக தற்போது நடைபெற இருந்த கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.