தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற அரசுக்கு வலியுறுத்தல்!
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. மேலும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பழைய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டு வரை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து 2004ம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தில் பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்கள் ஏதும் கிடைப்பதில்லை என்பதால் அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு – 67.58 லட்சம் பேர் காத்திருப்பு!!
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியதாவது, தமிழகத்தில் கடந்த 2004ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. மேலும் தற்போது திரிபுரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளனர். இதே தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுத்தியுள்ளார்.
மேலும் கடந்த 2006, 2011, 2021 ஆண்டுகளில் திமுக தனது வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இதுவரை பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தபடாமல் உள்ளது. அதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.