விஜய் டிவி “வேலைக்காரன்” சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – முடிந்தது இறுதிநாள் படப்பிடிப்பு!
விஜய் டிவி சீரியல்களுக்கு தனித்துவம் இருக்கும் நிலையில், முத்து படத்தை மையமாக வைத்து தொடங்கப்பட்ட “வேலைக்காரன்” சீரியல் தற்போது முடிவுக்கு வர இருப்பதாகவும், இறுதி நாள் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வேலைக்காரன் சீரியல்:
விஜய் டிவி சீரியல்கள் என்றாலே அதில் புதுமைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அந்த சீரியல் ஹிட் ஆகுதோ இல்லையோ ஆனால் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் மக்களிடம் பிரபலமாக இருக்கின்றனர். அந்த வகையில் பிரபலமான சீரியலில் ஒன்று தான் வேலைக்காரன் சீரியல். இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் சபரி நடித்து வருகிறார். மாறுபட்ட குடும்ப கதையை கொண்டுள்ளதால் இந்த சீரியல் பார்க்க அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
மீண்டும் கர்ப்பமாகும் ஜெனி – கருவை கலைக்க சொல்லுவாரா செழியன்? சீரியலில் புதிய திருப்பம்!
ஆனால் இந்த சீரியல் தொடங்கப்பட்டது முதல் முத்து பட கதையை மட்டுமே சார்ந்து ஒளிபரப்பாகி வருவதால் சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் இல்லாமல் இருந்தனர். அதனால் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் வேலைக்காரன் சீரியலை முடிவுக்கு கொண்டு வர சீரியல் குழு முடிவு செய்துள்ளது. கொரோனா ஊரடங்கின் போது இந்த சீரியல் தொடங்கப்பட்டு மக்களின் ஆதரவுடன் தற்போது வரை ஒளிபரப்பாகி வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த சீரியலில் அடுத்து கதை எப்படி கொண்டு செல்வது என தெரியாமல் இருப்பதால் இந்த சீரியலை முடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த சீரியலின் இறுதி நாள் படப்பிடிப்பு காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. அது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த சீரியலுக்கு பதிலாக செல்லம்மா என்ற புதிய சீரியலும், சிப்பிக்குள் முத்து என்ற சீரியலும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது