விஜய் டிவியில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல் – கிளைமாக்ஸ் ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவியில் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பிஏ சீரியல் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் கிளைமாக்ஸ் காட்சிகள் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.
தேன்மொழி பிஏ:
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மனம் கவர்ந்த பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் என TRPயில் போட்டி போடும் சீரியல்களும் இருக்கின்றன. ஒவ்வொரு சீரியலும் தனி தன்மையுடன் இருப்பதால் மக்கள் அதை ரசித்து பார்க்கின்றனர். இந்நிலையில் விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் நடித்து வரும் தேன்மொழி பிஏ சீரியல் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தியாவில் சரியும் கொரோனா – ஒரே நாளில் 18,795 பேருக்கு தொற்று! 179 பேர் பலி!
இந்த சீரியல் 450 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் விரைவில் முடிவடைய போவதாக தெரிகிறது. இது குறித்து சில வாரங்களுக்கு முன்பே ஜாக்குலினும் மறைமுகமாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த சீரியலில், கிளைமாக்ஸ் காட்சி குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் தேன்மொழி மிகவும் கோபத்துடன் கணவரை பார்க்க செல்கிறார், அவரை தடுக்கும் மாமியார் ‘டைவர்ஸ் நோட்டீஸ் அவன் அனுப்பி விட்டதால், இனி அவனுடன் நீ பேசக்கூடாது’ என சொல்கிறார்.
சென்னை: இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
ஆனால் அதை என் கண்ணை பார்த்து சொன்னால் ஏற்றுக்கொள்கிறேன் என தேன்மொழி கூறிவிட்டு கணவரை பார்க்க உள்ளே போகிறார். ஆனால் அவர் அங்கு இல்லை. நாத்தனார் தான் உண்மையை அவரிடம் சொல்கிறார். இதெல்லாம் தன் கணவர் செய்த சதி தான் என உண்மையை கூறுகிறார் நாத்தனார். மேலும் உன்னை பார்க்க தான் அவன் சென்று இருக்கிறான் என சொல்ல, தேன்மொழி உடனே வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். அவர்கள் சந்தித்து மீண்டும் ஒன்று சேர சீரியல் நிறைவடைய இருக்கிறது.