ராகினி கழுத்தில் தாலி கட்டிய அர்ஜுன்.. ஜெயிலில் ஆதி – “தமிழும் சரஸ்வதியும்” சீரியல் ட்விஸ்ட்!!
விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் யாரும் எதிர்பாராத பெரிய திருப்பம் ஒன்று வந்துள்ளது. ராகினி யாரை திருமணம் செய்ய போகிறார் என்பது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பெரிய ட்விஸ்ட் வைக்கப்பட்டுள்ளது.
தமிழும் சரஸ்வதியும்:
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ராகினியின் திருமண எபிசோடுகள் சென்று கொண்டிருக்கிறது. ராகினி திருமணத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் வந்துவிட்டது. ராகினி அர்ஜுன் திருமணத்திற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்து சந்தோசமாக கல்யாண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. ஆனால் கல்யாணத்தை நிறுத்த பெண் ஒருவர் வந்து அர்ஜுன் மீது புகார் சொல்கிறார். ஆனால் அந்த பெண் சரியானவர் இல்லை என தமிழும் சரஸ்வதியும் கண்டுபிடிக்கின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
அதனால் மீண்டும் ராகினி அர்ஜுன் கல்யாண ஏற்பாடு நடைபெறுகிறது. ஆனால் கல்யாண நாள் அன்று அர்ஜுன் அந்த பெண்ணை திருமணம் செய்ய இருப்பது போல வீடியோ வருகிறது. அதனால் கல்யாணம் நின்று போக, தமிழின் அப்பா ஆதியை தாலி கட்ட சொல்கிறார். ஆதி தாலி கட்ட போகும் நேரத்தில் தமிழும் சரஸ்வதியும் அர்ஜுன் உடன் வருகின்றனர். அர்ஜுன் என்னை கடத்தி வைத்ததால் தான் நான் இப்படி வீடியோ வெளியிட்டேன் என சொல்கிறார்.
என் வீட்டை விட்டு வெளியே போடி.. சண்டை முற்றி இனியாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய ராதிகா!
Exams Daily Mobile App Download
இதற்கெல்லாம் காரணம் ஆதி தான் என சொல்ல, ஆதியும் உண்மையை ஒப்புக் கொள்கிறார். அதனால் போலீசார் ஆதியை கைது செய்கிறார்கள். பின் ராகினியின் அம்மா அர்ஜுனின் அம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறார். பின் ராகினி கழுத்தில் அர்ஜுன் தாலி கட்டுகிறார். மேலும் ஜெயிலில் இருந்த ஆதி தமிழ் சரஸ்வதியை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என சொல்கிறார்.