
ராகினி திருமணத்தில் திடீரென நேர்ந்த திருப்பம் – “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் Unexpected ட்விஸ்ட்!
விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் ராகினி அர்ஜுனை கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக ப்ரோமோ வெளியான நிலையில் அதில் பெரிய ட்விஸ்ட் ஒன்று நடந்துள்ளது. அதன் படி ராகினி ஆதியை திருமணம் செய்து கொள்வாரா அர்ஜுனை திருமணம் செய்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழும் சரஸ்வதியும் சீரியல்
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தற்போது பரபரப்பான கதைக்களம் அரங்கேறி வருகிறது. சந்திரகலா ஆதிக்கு ராகினியை திருமணம் செய்ய வேண்டும் என நினைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். ஆனால் ராகினி மனதில் அர்ஜுன் தான் இருக்கிறார். குடும்பத்தின் கவுரவம் முக்கியம் என்பதால் ராகினி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, ஆனால் அர்ஜுன் ராகினியை மறக்க முடியாமல் விஷம் குடித்துவிடுகிறார். அதனால் அர்ஜுனை பார்க்க ராகினி வீட்டை விட்டு கிளம்பி செல்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
அப்போது தமிழும் சரஸ்வதியும் ராகினியை காணாமல் தேடுகின்றனர். மறுநாள் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடக்கிறது. ஆனால் ராகினியை காணாமல் அனைவரும் தேட தமிழ் அவர்களை தேடி சென்று இருப்பதாக சரஸ்வதி சொல்கிறார். அப்போது தமிழ் வர ராகினி கோவிலில் அர்ஜுனை திருமணம் செய்து கொண்டதாக சொல்கிறார். ஆனால் அங்கே பெரிய ட்விஸ்ட் ஒன்று காத்திருக்கிறது.
சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த ஆல்யா மானசா – அதுவும் இந்த சேனலா? ரசிகர்கள் உற்சாகம்!
Exams Daily Mobile App Download
அதாவது ராகினிக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அவர் அம்மாவின் சம்மதம் முக்கியம் என நினைத்து அர்ஜுன் உடன் வீட்டிற்கு வருவது போல கதை எடுத்து செல்லப்பட உள்ளது. ஆனால் ராகினி ஆதியை திருமணம் செய்வாரா இல்லை அர்ஜுனை திருமணம் செய்வாரா என்பது பெரிய ட்விஸ்ட்டாக இருக்க போகிறது.