விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புது கதாபாத்திரம் – கதையில் வர போகும் ட்விஸ்ட்!

0
விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புது கதாபாத்திரம் – கதையில் வர போகும் ட்விஸ்ட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் தற்போது ராகினி அர்ஜுன் திருமணம் குறித்த காட்சிகள் காட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமணத்தை நிறுத்த புதிய கதாபாத்திரம் ஒருவர் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

தமிழும் சரஸ்வதியும்:

விறுவிறுப்பிற்கும் திருப்பங்களுக்கும் பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தற்போது ராகினி அர்ஜுன் திருமண காட்சிகள் வந்து கொண்டிருக்கிறது. அர்ஜுன் கெட்டவன் என்பது யாருக்கும் தெரியாமல் இருக்கும் நிலையில், சந்திரகலா மற்றும் ஆதி சேர்ந்து இந்த திருமணத்தை நிறுத்த திட்டமிட்டு வருகின்றனர். ஆதிக்கு திருமணம் நிற்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

ஆனால் சந்திரகலா நான் பெரிய திட்டம் வைத்திருக்கேன்.. அதில் ஒரு குண்டு இப்போது வெடிக்கும் என சொல்கிறார். இந்நிலையில் திருமண மேடையில் ராகினி ஆதி சந்தோசமாக இருக்க, அப்போது புது கதாபாத்திரம் ஒருவர் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அவருடைய நிஜ பெயர் ஷாலினி, சீரியலில் அவர் நிஷா என்ற கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கிறார். அவர்,அர்ஜுனிற்கும் தனக்கும் ஏற்கனவே பழக்கம் இருப்பது போல சொல்ல அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அலர்ட் மக்களே.. தமிழகத்தில் நவம்பர் 21 முக்கிய பகுதிகளில் மின்தடை – முழு விவரம் உள்ளே!

Exams Daily Mobile App Download

அவரால் சீரியலில் பெரிய திருப்பம் வர இருக்கிறது. மேலும் அவரால் ராகினி, அர்ஜுன் திருமணத்தில் சிக்கல் வர இருக்கிறது. உண்மையாகவே அது அர்ஜுனின் முன்னாள் காதலியா இல்லை சந்திரகலாவின் ஏற்பாடா என்பது எல்லாம் அடுத்த வார கதைக்களமாக இருக்க போகிறது. எனவே அடுத்த வாரம் முழுவதும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் திருப்பங்களுக்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதியாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!