விஜய் டிவியின் ஸ்டார் கிட்ஸில் அழுது புலம்பல் – உண்மையா? நடிப்பா? குவியும் கமெண்ட்ஸ்!
விஜய் தொலைக்காட்சி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதுவிதமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் இந்த வாரம் ஸ்டார் கிட்ஸ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான ப்ரோமோ ஒன்று வெளியான நிலையில் அதில் ரசிகர்கள் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஸ்டார் கிட்ஸ்:
புதுவிதமான நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்வதில் விஜய் தொலைக்காட்சி முதலிடத்தில் உள்ளது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதிய நிகழ்ச்சிகள் விஜய் தொலைக்காட்சி பிரபலங்களை வைத்தே ஒளிபரப்பப்பட்டு வருகிறது. கடந்த வாரம் நகைசுவை நடிகர் விவேக்கின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த வாரம் விஜய் தொலைக்காட்சி பிரபலங்களின் குழந்தைகள் கலந்து கொள்ளும் ஸ்டார் கிட்ஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியான நிலையில், அதில் அறந்தாங்கி நிஷா தனது குழந்தையுடனும், சிங்கர் ராஜலக்ஷ்மி தனது மகள் மற்றும் மகனுடனும் கலந்து கொள்கின்றனர். அப்போது நிஷா தனது ஒன்றரை வயது மகளை ஆசைப்பட்டு பெற்றதாகவும் ஆனால் சினிமாவிற்கு வந்ததால் என்னிடம் பாசமாகவே இருக்க மாட்டேங்கிறாள் எனவும், நான் கூப்பிட்டால் வரவேமாட்டாள் என சொல்லி தேம்பி தேம்பி அழுகிறார்.
சந்தியாவை அழைத்து கவுரவிக்கும் கமிஷனர், குற்ற உணர்ச்சியில் சரவணன் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!
பின்னர் சிங்கர் ராஜலக்ஷ்மி தான் புடவை கட்டினால் தன் மகள் அழுக தொடங்கி விடுவாள். அவளை பிரிய மனமில்லாமல் நான் அழுது கொண்டே வந்து அடுத்தவர்களுக்காக சிரிக்க வேண்டும் என சொல்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இது உண்மையான அழுகையா இல்ல சினிமாவிற்கான நடிக்கின்றனரா என கமெண்ட் செய்துள்ளனர். சினிமாவில் சந்தோசம் மட்டும் இருந்த பிரபலங்களின் நிஜ வாழ்க்கையில் சோகமாக தான் உள்ளது.