விஜய் டிவியில் திடீரென நிறுத்தப்படும் 2 டாப் சீரியல்கள் – ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் தொலைக்காட்சியில் இன்னும் சிறிது நாட்களில் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட இருப்பதால், தற்காலிகமாக 2 முக்கியமான சீரியல்களை விஜய் டிவியின் குழு நிறுத்தி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய் டிவி சீரியல்
விஜய் டிவியில் எப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி துவக்கப்படும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம் 3ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் என்று அதிகாரப்பூர்வ தகவலை விஜய் டிவி அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி எப்போதுமே இரவு 9 மணி முதல் ஒளிபரப்பப்படும். இதனால் விஜய் டிவி குழுமம் ஏற்கனவே அந்நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கான நேரத்தினை மாற்றி அமைத்து வருகிறது. அதில் சில சீரியல்கள் நேர பற்றாக்குறை காரணமாக நிறுத்தி வைக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.
முக்கிய சீரியலில் இருந்து விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!!
அந்த வகையில் இனி வரும் நாட்களில் 2 பிரபலமான சீரியல்கள் ஒளிபரப்பப்படாது என்று கூறப்படுகிறது. அவை ‘செந்தூரப்பூவே’ மற்றும் ‘தேன்மொழி பிஏ’ ஆகிய இரண்டு சீரியல்கள் தான் நிறுத்தி வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இந்த சீரியல்களின் ரசிகர்கள் மிகவும் கவலையில் இருந்து வருகின்றனர். ‘செந்தூரப்பூவே’ சீரியலில் தற்போது நடிகர் ரஞ்சித், நடிகை ஸ்ரீநிதி மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் புதுப்பொலிவுடன் மீண்டும் ஒளிபரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவின் புதிய அவதாரம் – அவரே வெளியிட்ட வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக முக்கியமான சீரியல்களை விஜய் டிவி நிறுத்தி வைப்பதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று தான் கூற வேண்டும். இந்த முறை பிக் பாஸ் போட்டியில் விஜய் டிவியின் தொகுப்பாளர்கள், சீரியல் நடிகர் மற்றும் நடிகைகள் அதிகமாக களம் இறங்க இருக்கின்றனர் என்றும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.