விஜய் டிவி சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் அறிவிப்பு – ஒளிபரப்பு நேர மாற்றம்!
விஜய் டிவி சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், தற்போது ஒளிபரப்பாகி வரும் இரண்டு முக்கிய சீரியல்கள் நேர மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நேர மாற்றம்:
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் இருந்தாலும் ஒரு சில தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் அடித்து இருக்கின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் பல டாப் சீரியல்கள் இருந்தாலும் சினிமா படங்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மவுசு குறையாமல் இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் முதல் சீரியலில் நேர மாற்றம் செய்யப்பட்டது. மேலும் ஒரு சில சீரியல்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.
சஞ்சீவுடன் சண்டை போடும் ‘ராஜா ராணி 2’ ஆலியா மானஸா – உனக்கு யார் முக்கியம்? வைரலாகும் வீடியோ!
அந்த வகையில் பாதிலேயே நிறுத்தப்பட்ட “செந்தூர பூவே” சீரியல் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு பின் மீண்டும் தொடங்கப்பட்டது. புது பொலிவுடன் கதையில் பல சுவாரஸ்யங்களை புகுத்தி இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் ரஞ்சித் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி நடிக்கிறார். இந்நிலையில் இந்த சீரியல் நேர மாற்றம் செய்யப்பட்ட மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு – 18 மாத DA நிலுவைத்தொகை! ஒரே நேரத்தில் வருமா?
அதே போல மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் “தென்றல் வந்து என்னைத்தொடும்” சீரியல் இனி ரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து சேனல் தரப்பில் எந்த ப்ரோமோவும் இன்னும் வெளியாகவில்லை. இந்த இரண்டு சீரியல்களும் நல்ல TRPயில் இருக்கும் நிலையில் திடீரென நேர மாற்றம் செய்யப்பட இருப்பதால் ரசிகர்கள் அதிரச்சியில் இருக்கின்றனர்.