திடீரென முடிவுக்கு வந்த விஜய் டிவி சீரியல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தமிழ் சின்னத்திரையில் குறிப்பாக விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட குடும்ப சீரியலான “பாரதிதாசன் காலனி” சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் அந்த சீரியல் தொடர்ந்து பார்த்து வந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
புதிய சீரியல் முடிவு
விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. அதில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் பாரதிதாசன் காலனி. நல்ல ஒரு குடும்ப சீரியலான இது, கடந்த மே மாதம் தான் தொடங்கப்பட்டது. ஒரு காலனியில் வாழும் பல குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்து பாசத்துடன் வாழ்வது தான் இந்த சீரியலின் கதை. பல குடும்பங்கள் வாழும் அந்த காலனியில் நிகழும் பண்டிகை, விழாக்கள், சந்தோஷம், துக்கம், உறவுமுறை, காதல், சண்டை என கதை விறுவிறுப்பாக சென்றது.
இந்த சீரியலில் ஐஸ்வர்யா, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷீலா, கருணா விலாசினி, பிரபாகர் சந்திரன் உள்ளிட்ட பல முன்னணி சீரியல் பிரபலங்கள் நடித்து வந்தனர். நல்ல எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட இந்த சீரியல் TRP-யில் பெரும் வீழ்ச்சியை கண்டது. மேலும் அக். 9 ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கும் நிலையில், கடைசி இடத்தில் இந்த சீரியல் இருப்பதால் இந்த சீரியலை முடிக்க சீரியல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கண்ணன் லஞ்சம் வாங்கியதை தெரிந்து கோவப்படும் மூர்த்தி, கதிரை திட்டிய பார்வதி – இன்றைய எபிசோட்!
Exams Daily Mobile App Download
தொடங்கப்பட்டு சில மாதங்களில் இந்த சீரியல் முடிவுக்கு வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். மேலும் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் இரண்டு வாரங்களுக்கு முன் முடிவடைந்துள்ள நிலையில், கடைசி நாள் படப்பிடிப்பிற்கு பல நடிகர் நடிகைகள் வரவில்லையாம். சீரியல் குழுவிற்கும், சேனல் தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த சீரியலை முடிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.