விஜய் டிவியில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல் – வருத்தத்தில் கதாநாயகி!
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் ஒன்று தற்போது முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அந்த சீரியல் நடிகை மிகவும் சோகத்தில் இருக்கிறாராம்.
விஜய் டிவி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ‘தேன்மொழி பிஏ’ சீரியலுக்கு என்று பலர் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இந்த சீரியல் கொரோனா பரவலின் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. இதனால் இந்த சீரியல் சில நாட்களுக்கு ஒளிபரப்பப்படாமல் இருந்து வந்தது. இதில் தொகுப்பாளினி ஜாக்குலினின் நடிப்பு மிகவும் எதார்த்தமானதாக இருக்கும். முதன் முதலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வந்தார்.
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – அரசு உத்தரவு!
அவரின் காமெடியான பேச்சு, அனைவரும் கிண்டல் செய்தாலும் அதனை அசால்ட்டாக எடுத்து கொள்ளும் பக்குவம் ஆகியவை அனைவரையும் தொகுப்பாளினி ஜாக்குலின் பால் ஈர்த்திருந்தது. அந்த சமயத்தில் அவருக்கு நடிகை நயன்தாராவுடன் ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை அவர் நன்றாக பயன்படுத்தி கொண்டு சிறப்பாக நடித்திருந்தார். அதன் பிறகு தான் அவருக்கு ‘தேன்மொழி பிஏ’ சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
தமிழக அரசு பள்ளிகளில் வரப்போகும் மாற்றங்கள் – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்!
இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்ததால் அவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவாகியது. இப்படியா இருக்க, இந்த சீரியல் தான் தற்போது முடிவடைய இருக்கிறதாம். கொரோனா ஊரடங்கு காரணமாகவும், நேர பிரச்சனை காரணமாகவும் இந்த சீரியல் முடிவடைய இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் நடிகை ஜாக்குலின் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம். சீரியலில் நடிக்க ஆரம்பித்ததால் அவர் எந்த நிகழ்ச்சியினையும் தொகுத்து வழங்கவில்லை என்றாலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘முரட்டு சிங்கிள்ஸ்’ நிகழ்ச்சியில் ஒரு நடுவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.