விஜய் டிவி பிரபல சீரியல் கதாநாயகியின் கனவு நிறைவேறியது – அவரே வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துக்கள்!
விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்படும் “தென்றல் வந்து என்னை தொடும்” சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் பவித்ரா ஜனனிக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அவருடைய வாழ்க்கையில் நீண்ட நாள் கனவு ஒன்று நினைவாகிவிட்டது என அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்.
பவித்ரா ஜனனி:
தமிழ் சின்னத்திரை சீரியல்கள் மக்களின் வாழ்க்கையில் சிறந்த பொழுது போக்கு அம்சமாக மாறிவிட்டது. அந்த வகையில் விஜய் டிவியில் புதுவிதமான கதையுடன் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த சீரியல் கதாபாத்திரங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் அபி கதாபாத்திரத்தில் மிகவும் தைரியமான பெண்ணாக நடித்து வருபவர் நடிகை பவித்ரா ஜனனி.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் அவர் கதாநாயகியாக வருவதற்கு முன்னதாக பல சீரியலில் சைடு ரோலில் நடித்து இருக்கிறார். இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் குலதெய்வம் சீரியலில் கூட அவர் நடித்து இருக்கிறார். இப்படி படிப்படியாக முன்னேறி தற்போது விஜய் டிவியில் முன்னணி கதாநாயகி வரிசையில் இடம் பிடித்து இருக்கிறார். மேலும் ஒவ்வொருவரும் தனது வாழ்க்கையில் ஒரு கனவை வைத்துக் கொண்டு அதை எப்படியாவது செய்ய வேண்டும் என குறிக்கோளுடன் இருப்பார்கள்.
ஜீ தமிழ் ரசிகர்களுக்கு சூப்பர் சர்பிரைஸ் – இனி சனிக்கிழமையும் உங்க Favourite சீரியல்கள்!
Exams Daily Mobile App Download
அந்த வகையில் பவித்ரா ஜனனி தனது குடும்பத்துடன் விமான பயணம் செய்ய வேண்டும் என கனவுடன் இருந்திருக்கிறார். அந்த கனவு தற்போது நினைவாகி இருப்பதை அவர் தனது ரசிகர்களுக்கு புகைப்படத்துடன் பகிர்ந்து இருக்கிறார். மேலும் அவரின் அந்த பதிவில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.