“ராஜா ராணி 2” சீரியல் – செந்தில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் அர்ச்சனா! அடுத்த எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் சரவணனன் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு சந்தியாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். இந்நிலையில் அர்ச்சனா செந்தில் காலில் விழுந்து அழுவது போல வீடியோ ஒன்றை செந்தில் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் பாலாஜி தனது இன்ஸ்டாவில் பதிவேற்றியுள்ளார்.
ராஜா ராணி 2:
விஜய் டிவி சீரியல்களில் மாறுபட்ட கதையுடன் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில், தற்போது சந்தியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப உள்ளதாக பிரச்சனை நடைபெறுகிறது. மேலும் மாப்பிள்ளை வீட்டில் பார்வதி படிப்பிற்கு பின்னர் திருமணம் செய்யலாம் என சந்தியா சொல்லவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்கிடையில் பார்வதி கல்யாணத்தை நிறுத்த விக்கிக்கு உதவி செய்ததால் அர்ச்சனா மீது செந்தில் கோவமாக இருக்கிறார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து விலகிய ஐஸ்வர்யா? இனி இவருக்கு பதில் இவர்!
அவருடன் பேசவே இல்லை. அர்ச்சனா எவ்வளவோ சொல்லியும் அவர் பேசவே இல்லை. இதனால் இவர்களுக்குள் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையல், தற்போது செந்தில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் பாலாஜி தியாகராஜன் ராஜா ராணி 2 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.
பைக் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் – படுகாயம், சுயநினைவு இழப்பு! தீவிர சிகிச்சை!
அதில் அர்ச்சனா அழுது கொண்டே செந்தில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். ஒரு வேளை திருமணத்தை நிறுத்த அர்ச்சனா தான் மாப்பிளை வீட்டில் சந்தியா சொன்னதாக சொல்லிருப்பாரோ என இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். எவ்வளவு சொல்லியும் இந்த அர்ச்சனா திருந்தாமல் இருக்கிறார் என ஒரு சிலர் இந்த வீடியோவில் கமெண்ட் செய்துள்ளனர். இந்த வீடியோ பார்த்த ரசிகர்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.