ஐபிஎஸ் ஆனாலும் சிவகாமியின் மருமகளாக நடந்து கொள்ளும் சந்தியா – வெளியான “ராஜா ராணி 2” ப்ரோமோ!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியா ஐபிஎஸ் ஆனாலும் சிவகாமியின் மருமகளாக என்றும் இருக்க வேண்டும் என வீட்டு வேலைகளை செய்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ராஜா ராணி 2 ப்ரோமோ
ராஜா ராணி 2 சீரியலில், சந்தியா தன்னுடைய அம்மா அப்பாவின் கனவை நிறைவேற்றி ஐபிஎஸ் ஆகிவிட்டார். ஆனாலும் சிவகாமி தொடக்கத்தில், சந்தியா பெரிய போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் வீட்டில் மருமகளாக இருக்க வேண்டும் என கண்டிஷன் போட்டு இருக்கிறார். இப்போதும் கூட சந்தியா அதை காப்பாற்ற நினைக்கிறார். இது குறித்து வெளியான ப்ரோமோவில் வீட்டில் விசேஷமான நாள் என்பதால் சிவகாமி வீட்டை துடைத்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது சரவணனின் அப்பா நடந்து செல்ல, அவரை சிவகாமி திட்டுகிறார். அந்த நேரம் பார்த்து சந்தியா ஒரு கேஸ் விஷயமாக பேசிக் கொண்டு வருகிறார். அவர் இது தற்கொலை தான் இப்போது தான் பிணவறைக்கு சென்றுவிட்டு வருகிறேன் என சொல்ல, அதை கேட்ட சிவகாமி குளித்துவிட்டு வா என சொல்கிறார். மேலும் தரையை துடைக்க சொல்ல, உடனே சந்தியா சரி என சொல்கிறார். பின் சந்தியா குளித்துவிட்டு தரையை துடைத்து கொண்டிருக்க, சந்தியா உடன் பணிபுரியும் பெண்கள் வந்து அதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.
Exams Daily Mobile App Download