குடும்பத்துடன் மீண்டும் இணைந்த சந்தியா.. காரணம் இதுவா? “ராஜா ராணி 2” ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் பல சுவாரசியமான காட்சிகள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் ராஜா ராணி குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறுவது போல புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
ராஜா ராணி 2:
ராஜா ராணி 2 சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் வரிசையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அதனால் கதையும் சுவாரசியம் குறையாமல் நகர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் தற்போது சுப நிகழ்ச்சி நடைபெற இருப்பது போல புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Exams Daily Mobile App Download
ஏற்கனவே ஜெஸ்ஸி பார்லர் திறப்பு விழா முடிவடைந்த நிலையில் இது என்ன நிகழ்ச்சியாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். அது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த சீரியலில் இனி வரும் எபிசோடில் அர்ச்சனா செந்தில் குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதில் கூடுதல் சிறப்பாக சந்தியா போலீஸ் ட்ரைனிங்கில் இருந்து வந்திருக்கிறார். மேலும் அர்ச்சனா ஏற்கனவே ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையால் குழந்தையை மாற்றி இருப்பார். அதனால் பெயர் வைக்கும் நிகழ்ச்சியில் என்ன ட்விஸ்ட் வர இருக்கிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.