சரவணனை போட்டியில் ஜெயிக்க விடாமல் அர்ச்சனா சதித்திட்டம் – ராஜா ராணி 2 ட்விஸ்ட்!
ராஜா ராணி 2 தொடர் மக்களின் விருப்பமான தொடராக மாறியுள்ளது. தற்போது மிகவும் பரபரப்பாக சென்று வரும் தொடரில் அடுத்த படியாக இந்த வாரம் வர இருக்கும் புதிய திருப்பங்கள் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ராஜா ராணி 2:
விஜய் டிவியின் தொடர்கள் என்றாலே மக்களுக்கு மிகவும் அபிமான தொடர்கள் தான் என்ற பெயரை எடுத்துள்ளது. மக்களுக்கு பிடித்தமான படி கதையின் போக்கை மாற்றி அமைத்து, விறுவிறுப்பை ஏற்றிவிடுகிறார்கள். அந்த வகையில் ராஜா ராணி முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. படித்து ஐபிஎஸ் அதிகாரியாக மாற வேண்டும் என்று கொள்கையுடன் உள்ள சந்தியா படிக்காத சரவணனை திருமணம் செய்து கொள்வதால் நேரும் விளைவுகள் தான் கதை.
Post Office-ல் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டம் – பெற்றோர்கள் கவனத்திற்கு!!
சரவணன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று சந்தியாவும், சந்தியா கொள்கையில் ஜெயிக்க வேண்டும் என்று சரவணனும் சேர்ந்து ஊக்குவிக்கிறார்கள். தற்போது சரவணன் சென்னையில் ஒரு சமையல் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். சரவணன் போட்டியில் சமைப்பதை பார்க்க சிவகாமியை தவிர அனைவரும் வருகின்றனர். அர்ச்சனா முதலில் இவர்கள் யாரும் அங்கு போகக்கூடாது என்று பல தடைகளையும் செய்து வந்தார். அதையும் மீறி அனைவரும் வந்து விடுகின்றனர்.
குழந்தைகளை குறி வைத்து தாக்கும் ஓமைக்ரான் பாதிப்பு – தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தல்!!
சிவகாமி வீட்டில் சாமி கும்பிடும் போது கால் தட்டி ரத்தம் வந்து விடுகிறது. இதனால் சரவணனுக்கு ஏதோ ஆபத்து என்று உணர்ந்து பயப்படுகிறார். அதே நேரம் அர்ச்சனா இவ்வளவு தூரம் வந்து சரவணன் போட்டியில் ஜெயிக்க விட்டு விடுவேனா என்று மனதிற்குள் நினைத்து கொள்கிறார். எப்படியாவது அதை நிறுத்த தான் சாமியே நம்மள இங்க வந்து சேத்திருக்கு என்று நினைத்து கொள்கிறார். இந்நிலையில், சரவணன் போட்டியில் கலந்து கொண்டு ஜெயிப்பாரா இல்லையா என்பதை வரும் நாட்களில் தான் தெரிந்து கொள்ள முடியும்.