அப்பாவிற்கு முடியவில்லை, கதை கதையாக சொன்ன அர்ச்சனா – “ராஜா ராணி 2” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் பல அதிரடி காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. பல நாட்களாக வீட்டிற்கு தெரியாமல் பல உண்மைகளை அர்ச்சனா மறைத்த நிலையில் தற்போது ஒன்று ஒன்றாக வெளியே வருகிறது அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ராஜா ராணி 2:
ராஜா ராணி 2 சீரியலில் சிவகாமியை சிறையில் அடைத்தது யார் என்ற உண்மை தெரிய வரும் நேரம் நெருங்கிவிட்டது. போலீஸ் அதிகாரி ஒருவர் வீட்டிற்கு வர புகார் கொடுத்தவர் பெயர் பிரியா என சொல்கிறார். மேலும் அவருடைய முகவரியை சொல்ல, அது அர்ச்சனாவின் தங்கை என்பது தெரியவருகிறது. ஆனால் இது பற்றி குடும்பமே எதுவும் பேசாமல் இருக்கிறது. அர்ச்சனாவை அழைத்து இது பற்றி கேட்கலாம் என நினைக்க ஆனால் அர்ச்சனா அம்மாவிற்கு நெஞ்சுவலி அவரை பார்த்து அப்பாவிற்கு தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
மேலும் சிவகாமி நம்ப வேண்டும் என்பதற்காக என் அப்பாவிற்கு தலையில் பயங்கரமாக அடிபட்டு மருத்துவமனை முழுவதும் ரத்தம் ஆகி இருக்கிறது. அதனால் தலையில் ஆப்ரேசன் செய்ய வேண்டும் என சொன்னார்கள் ஆப்ரேசன் நல்லபடியாக முடிய வேண்டும் என கதை கதையாக சொல்ல அதை எல்லாம் கேட்ட சந்தியா அர்ச்சனா என்ன நடந்தது என உண்மையை கேளு என சொல்கிறார். ஆனால் சிவகாமி சந்தியாவை அமைதியாக இருக்க சொல்ல மீண்டும் அர்ச்சனா அப்பா பற்றி கதை கதையாக அடித்து விடுகிறார்.
ரஞ்சி கோப்பையில் விளையாடும் இந்திய நட்சத்திரம் சேதேஷ்வர் புஜாரா – ரசிகர்கள் உற்சாகம்!
இப்படி எல்லாம் உங்க அப்பா இருந்தால் நீங்க மருத்துவமனையில் இருக்கலாமே என பார்வதி கேட்க, என்ன செய்வது ஒரு வீட்டில் மருமகளாக வந்தால் எல்லாத்தையும் பார்க்க தான வேண்டும் என சொல்ல, அம்மாவின் இந்த நிலைமைக்கு காரணமாக இருந்த அர்ச்சனாவை பார்த்து சரவணன் மீண்டும் கோபப்படுகிறார். மேலும் இன்றைய எபிசோடில் அண்ணன் தம்பிக்கு இடையே சண்டை நடக்க இருக்கிறது. மேலும் சரவணன் அர்ச்சனாவை செருப்பால் அடிக்க போவது போல ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.