விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ ஆல்யா மானசா ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – இனி சீரியலில் நடிக்க மாட்டார்!
ஆலியா பிரசவத்திற்காக தான் ராஜா ராணி 2 தொடரில் இருந்து விலகினார். தற்போது ஆலியாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் குழந்தையை கவனிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் ராஜா ராணி தொடரில் இணையப்போவதில்லை என கூறியுள்ளார்.
ஆலியா:
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமாகி அதே சீரியலில் தன்னுடன் இணைந்து நடிக்கும் சஞ்சீவை காதலித்து பெற்றோரின் சம்மதத்தோடு திருமணமும் செய்துகொண்டார். ராஜா ராணி தொடரினை தொடர்ந்து ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த தொடரில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கயல் தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
Exams Daily Mobile App Download
ராஜா ராணி 2 தொடரில் ஆலியா நடித்து கொண்டிருந்த போதே இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். ஆலியா கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் ஆலியா சீரியலில் இருந்து விலகிக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிறை மாத கர்ப்பிணியாக இருந்தபோது கூட ராஜா ராணி தொடரில் தொடர்ந்து நடித்து வந்தார். கிட்டத்தட்ட பிரசவத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பாகவே ராஜா ராணி சீரியலில் இருந்து விலகினார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது ஆலியாவின் முகத்தை காட்டி மட்டுமே அனைத்து சீன்களையும் முடித்துவிட்டனர்.
விஜே சித்ரா இறந்த போது கூட ஹேம்நாத் செய்த காரியம் – ரேகா நாயர் ஆதங்கம்! ரசிகர்கள் ஷாக்!
இதுமட்டுமல்லாமல், தொடர்ந்து நான் மட்டுமே சந்தியா கதாபாத்திரத்தில் நடிப்பேன் எனவும் கூறியிருந்தார். பிரசவத்திற்கு செல்ல இருப்பதால் அந்த சில நாட்களுக்கு மட்டுமே சந்தியா கதாபாத்திரத்தில் ரியா என்ற புதுமுக நடிகை சந்தியா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். தற்போது ஆலியாவிற்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. எப்போது ஆலியா மீண்டும் சீரியலில் இணைந்துகொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இருந்தனர். குழந்தையை கவனிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் ராஜா ராணி தொடரில் இணையப்போவதில்லை என தற்போது ஆலியாவே கூறியுள்ளார்.