VJவாக இருந்து சீரியலில் களமிறங்கும் ‘விஜய் டிவி’ பிரியங்கா – இணையத்தில் லீக்கான தகவல்!
பிக் பாஸ் வீட்டை விட்டு பிரியங்கா வெளியேறிய பிறகு படவாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத காரணத்தினால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரியங்கா
விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளராக மக்களின் மனதில் பதித்தவர் தான் விஜே பிரியங்கா. விஜய் தொலைக்காட்சியில் புதிதாக எந்த ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானாலும் அந்த நிகழ்ச்சியை பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வந்தார். இவர் தனது சாதாரணமான காமெடி பேச்சால் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதையும் கவர்ந்திருக்கிறார். சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், சூரிய வணக்கம், ஜோடி நம்பர் ஒன், கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ் மற்றும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
ExamsDaily Mobile App Download
இதற்கு பிறகு பிரியங்காவிற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. வெளியே இருப்பது போலவே பிக் பாஸ் வீட்டையும் கலகலப்பாக அனைவரிடமும் பாசமாக இருந்து வந்தார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசையும் தட்டி சென்றார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கி வந்தார். பிக் பாஸ் வாய்ப்பிற்கு பிறகு பிரியங்காவிற்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
படப்பிடிப்பின் போது கயல் பாப்பாவுடன் ஓடி விளையாடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் – வைரலாகும் வீடியோ!
ஆனால், பிரியங்காவிற்கு எந்த வாய்ப்புகளும் வந்து பலன் கொடுக்கவில்லை. தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து கொண்டிருக்கும் மிர்ச்சி செந்தில் பிரியங்காவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு உங்களுடன் பணியாற்ற இருப்பது மிக பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது என சமூக வலைப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து, பிரியங்காவும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடிக்க இருக்கிறாரோ என ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் உள்ளனர்.