விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் வாங்கும் ஒரு நாள் சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!
தமிழ் சின்னத்திரையில் முன்னணி டிவியான விஜய் டிவியின் மூலமாக ஏகப்பட்ட திறமைசாலிகள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றனர். அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளாக தொகுப்பாளராக இருப்பவர் தான் மாகாபா ஆனந்த். இந்நிலையில் அவர் ஒரு நிகழ்ச்சியில் ஒரு எபிசோடிற்கு வாங்கும் சம்பளம் குறித்த முழு விவரம் வெளியாகி இருக்கிறது
தொகுப்பாளர் மாகாபா ஆனந்த்:
விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உண்டு. ஞாயிறு தோறும் புதுமையான கண்டெண்ட்களுடன் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த நிகழ்ச்சிகளை விட அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். ப்ரியங்கா, டிடி, அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஈரோடு மகேஷ் என பலர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றனர். ஆனால் அவர்களில் மக்களின் மனதை கவர்ந்த அங்கரை பார்க்கவே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் ரேடியோ ஆர்ஜே வாங்க தன்னுடைய பயணத்தை தொடங்கி அதன் பின் 10 ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக களமிறங்கியவர் மாகாபா ஆனந்த். இவர் கடந்த 10 ஆண்டுகளாக விஜய் டிவியில் பணிபுரிந்து வருகிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக மக்களை கவர்ந்த அவர் பல சீசனாக அந்த நிகழ்ச்சியை பிரியங்கா உடன் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
அது இது எது, Mr. And Mrs. சின்னத்திரை, தி வால், முரட்டு சிங்கிள், ஸ்டார்ட் ம்யூசிக் போன்ற வெற்றி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பெருமை அவருக்கு உண்டு. சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதில் அவருக்கு பிரைட் ஆப் தி சேனல் என்ற விருது கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அவர் ஒரு நிகழ்ச்சியில் ஒரு எபிசோடிற்கு ரூ. 1 லட்சம் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.