சீரியலில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தீபிகா – வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கண்ணன் ஐஸ்வர்யா காதல் காட்சிகள் மற்றும் திருமண காட்சிகளில் நடித்து பிரபலமான தீபிகா மீண்டும் சீரியலில் நடிக்க வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தீபிகா மீண்டும் வருகை:
விஜய் டிவி சீரியல்களில் படு சூடாக போய்க் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் 4 அண்ணன் தம்பிகளில் ஒரு தம்பியான குமரன், முல்லை நடித்த காட்சிகள் ஆரம்ப கட்டத்தில் சீரியலை பிரபலமாக்கியது. குறிப்பாக கதிர் முல்லை கெமிஸ்ட்ரி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பி பார்க்கப்பட்டது. இவ்வாறு அவர்களது ரொமான்ஸ் காட்சிகளுக்காகவே சீரியலை பார்க்கும் ரசிகர் பட்டாளங்களும் இருந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற 26ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அந்த வரிசையில் கடைக்குட்டி கண்ணன், ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த காட்சிகளும் மீண்டும் சீரியலை ட்ரெண்ட் ஆக்கியது. ஏனென்றால் பலருக்கும் ஐஸ்வர்யா கண்ணன் ஜோடி மிகவும் பிடித்தது. இந்நிலையில் தான் ஐஸ்வர்யாவாக நடித்து வந்த தீபிகா மாற்றப்பட்டார். அதற்கு காரணம் முகப்பரு தான் என்றும் சொல்லப்பட்டு வந்தது. ஏற்கனவே ஐஸ்வர்யா ரோல் மாற்றப்பட்டு தான் தீபிகா வந்தார். ஆனால் தற்போது மீண்டும் மாற்றப்பட்டு அந்த கதாபாத்திரத்தில் ‘ஈரமான ரோஜாவே’ சாய் காயத்ரி நடித்து வருகிறார்.
தமிழக ரேஷன் கடைகளில் 4000 காலிப்பணியிடங்கள் – 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்!
சீரியலுக்கு பின்னும் அவரும் கண்ணனும் அடிக்கும் லூட்டிகள் குறும்படமாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வந்தனர். அதை பார்க்கும் ரசிகர்கள் ஜோடிப்பொருத்தம் பிரமாதம் என்றும் சிலர் கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்நிலையில் இவர் மீண்டும் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுக்க உள்ளார். அதாவது மீண்டும் அவர் ஐஸ்வர்யா ரோலுக்கு வரப்போவதில்லை. புதிதாக கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் ஜில்லுனு ஒரு காதல் எனும் தொடரில் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதாக அவர் இணையத்தில் ஷேர் செய்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.