கர்ப்பமான முல்லைக்கு வளைகாப்பு நடத்தும் குடும்பத்தினர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!

0
கர்ப்பமான முல்லைக்கு வளைகாப்பு நடத்தும் குடும்பத்தினர் - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ப்ரோமோ ரிலீஸ்!
கர்ப்பமான முல்லைக்கு வளைகாப்பு நடத்தும் குடும்பத்தினர் - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ப்ரோமோ ரிலீஸ்!
கர்ப்பமான முல்லைக்கு வளைகாப்பு நடத்தும் குடும்பத்தினர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!

முல்லை செயற்கை முறையில் கருவுருவாரா என எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த வேளையில், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் முல்லைக்கு வளைகாப்பு நடத்தும்படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. முல்லைக்கு குழந்தை பிறக்காது என்கிற விஷயம் தான் தற்போது மிகப் பெரிய பிரச்சனையாக வந்து நிற்கிறது. முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என மருத்துவர் கூறிவிடுகிறார். இதனால் ஏதோ கொலை குற்றம் செய்தது போல முல்லை யாரின் முகத்தையும் பார்க்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார். என்னால் ஒரு குழந்தையை கூட கதிருக்கு பெற்று கொடுக்க முடியவில்லை என ஏக்கத்தில் உள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன், தம்பிகளுக்கிடையே ஏற்படும் பிளவு – ஜனார்த்தனன் சூழ்ச்சி! ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில் மருத்துவரை சந்தித்து மேற்கொண்டு சிகிச்சை எடுக்கலாம் என பிளான் செய்துள்ளனர். மருத்துவரும் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என கூறிவிட்டார். ஆனால் இந்த செயற்கை முறை கருவுறுதலுக்கு அதிகமாக செலவாகும் எனவும் கூறிவிட்டார். காசுக்கு என்ன செய்வது என அனைவரும் யோசித்து கொண்டிருந்த நேரத்தில் மூர்த்தி வீடு கட்டுவதை தற்போதைக்கு நிறுத்தி வைக்கலாம் என கூறிவிடுகிறார். இதனை கேட்ட மீனாவிற்கு கோபமாகி விடுகிறது. இது குறித்து தனியாக ஐஸ்வர்யாவிடம் பேசுகிறார். முல்லைக்கு தற்போது 25 வயது தான் ஆகிறது. இப்போதே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா. தற்போது வீடு கட்டுவது தான் மிகவும் முக்கியம் என்று கூறுகிறார்.

மீனா கூறியதை மறைந்திருந்து முல்லை கேட்டுவிடுகிறார். இருந்தாலும் முல்லை தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என நினைக்கிறார். தொடர்ந்து செயற்கை முறையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள போகிறார். இந்நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது முல்லை கர்ப்பமாக இருப்பது போலவும், முல்லைக்கு வளைகாப்பு நடத்துவது போலவும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. முல்லைக்கு குழந்தை பிறக்கப்போகிற மகிழ்ச்சியில் குடும்பத்தினர்கள் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!