டிவியில் இன்டெர்வியூ கொடுத்த கதிர், தனத்தை திட்டிய மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
டிவியில் இன்டெர்வியூ கொடுத்த கதிர், தனத்தை திட்டிய மூர்த்தி - இன்றைய
டிவியில் இன்டெர்வியூ கொடுத்த கதிர், தனத்தை திட்டிய மூர்த்தி - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
டிவியில் இன்டெர்வியூ கொடுத்த கதிர், தனத்தை திட்டிய மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் , தனம் குடும்பத்துடன் பேசிக் கொண்டிருக்க கஸ்தூரி வந்து கதிர் இன்டெர்வியூ பற்றி சொல்கிறார். அனைவரும் இன்டெர்வியூ பார்க்க மூர்த்தி தனத்தை சத்தம் போடுகிறார். மறுபக்கம் கதிர் முல்லையை சமாதானம் செய்ய கஸ்டமரை கவரும் படி வேலை செய்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில், தனம் ஐஸ்வர்யாவிடம் உன் பலர்லருக்கு கஸ்டமர் வரவில்லையா என கேட்க அப்போது கஸ்தூரி வருகிறார். கஸ்தூரியிடம் என்ன விஷயமாக வந்தீங்க என கேட்க, கஸ்தூரி கதிர் இன்டெர்வியூ கொடுத்து இருப்பதாக சொல்கிறார். உங்களிடம் சொன்னால் நீங்களும் பார்ப்பீங்க என நினைத்ததாக சொல்கிறார். பின் தனம் கண்ணன் ஐஸ்வர்யா மீனா கஸ்தூரி என அனைவரும் டிவி பார்க்க, கதிரின் இன்டெர்வியூ தொடங்குகிறது. அதில் உங்களுக்கு எப்படி சமைக்கும் ஆசை வந்தது என பேட்டி எடுப்பவர் கேட்க கதிர் என் அண்ணி நன்றாக சமைப்பார், அவரிடம் இருந்து எனக்கு வந்ததாக சொல்கிறார்.

பின் கதிர் மளிகை கடையை விட்டு ஏன் வந்தீங்க என கேட்க, அதுவும் எங்க தொழில் தான் இதுவும் எங்க தொழில் தான், எங்க குடும்பத்தை யாராலும் பிரிக்க முடியாது என சொல்கிறார். அதை கேட்ட மூர்த்தி உடனே டிவியை ஆப் செய்கிறார். கஸ்தூரி என்ன ஆச்சு என கேட்க, மூர்த்தி அவன் நடிக்கிறான். அவ்வளவு பாசம் இருப்பவனாக இருந்தால் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என சொல்கிறார். அவ்வளவு பாசமாக இருப்பவன் நான் சாக இருந்த போது அவன் வீட்டிற்கு வந்து பார்க்க வந்தானா, ஊரில் இருப்பவர்களுக்கு பேட்டி கொடுத்து ஏமாற்றுகிறான் என சத்தம் போடுகிறார்.

தனம் மூர்த்தி பேசியதை நினைத்து வருத்தப்பட, கண்ணன் சமாதானம் செய்ய வருகிறார். டிவி பார்க்க கூட இந்த வீட்டில் உரிமை இல்லை என தனம் சொல்ல, அப்படி எல்லாம் இல்லை அவருக்கும் பாசம் இருப்பதாக கண்ணன் சொல்கிறார். மாமா கோவம் சரி தான். அவன் யோசிக்காமல் செய்துவிட்டான் என சொல்கிறார். பின் கண்ணன் கோவப்படும் முகம் உங்களுக்கு செட் ஆகவில்லை என சொல்கிறார். பின் மூர்த்தி இடம் விற்பவர்க்கு பணம் கொடுக்கலாம் என சொல்லிவிட்டு நல்ல நாள் பார்க்க சொல்கிறார். ஆனால் தனம் கோவமாக இருக்க பின் நல்ல நேரம் பார்த்து சொல்கிறார்

கோபி மீது கோவப்படும் ராதிகா, கல்யாணத்தை நிறுத்த வந்த ராமமூர்த்தி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

மறுபக்கம் முல்லை கதிருக்கு சாப்பாடு வைக்க, கதிர் போதும் என சொல்கிறார். உடனே முல்லை என் சாப்பாடு தான் உங்களுக்கு பிடிக்காதே என சொல்கிறார் . அப்படி எல்லாம் இல்லை என கதிர் சொல்ல, உங்க அண்ணி சமையல் தான் பிடிக்குமே என முல்லை சொல்ல, கதிர் உன்னுடைய பொறுமை தான் எனக்கு பிடிக்கும் என கதிர் சொல்கிறார். கடை தொடங்கி 28 நாள் ஆகிவிட்டது. என்ன செய்வது என கேட்க கதிர் 2 நாளுக்கு சிக்கன் போட இருப்பதாகவும் இலவசமாக கொடுக்க போவதாக சொல்ல, ஆனால் முல்லை இது சரியாக வராது என சொல்கிறார். பின் மீனா பீரோ பழசாகிவிட்டதாக சொல்கிறார். பின் மீனாவை ஜீவா நக்கல் அடிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!