மேனேஜரிடம் திட்டு வாங்கிய கண்ணன், ஜனார்த்தனன் செயலால் கோவப்படும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
மேனேஜரிடம் திட்டு வாங்கிய கண்ணன், ஜனார்த்தனன் செயலால் கோவப்படும் மூர்த்தி - இன்றைய
மேனேஜரிடம் திட்டு வாங்கிய கண்ணன், ஜனார்த்தனன் செயலால் கோவப்படும் மூர்த்தி - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
மேனேஜரிடம் திட்டு வாங்கிய கண்ணன், ஜனார்த்தனன் செயலால் கோவப்படும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் லோன் வசூலிக்க சென்ற இடத்தில் பாட்டி ஒருவர் கஷ்டத்தை சொல்ல, உடனே கண்ணன் அனுதாபப்பட்டு காசு வாங்காமல் செல்கிறார். பின் மேனேஜர் கண்ணனை பயங்கரமாக திட்ட, கண்ணன் வருத்தப்படுகிறார். பின் ஜனார்த்தனன் மூர்த்தி வீட்டை சரி செய்ய வர அதை நினைத்து மூர்த்தி கவலைப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கண்ணன் லோன் காசை வாங்க செல்ல ஆனால் அங்கே இருந்த பாட்டி, விவசாயம் இல்லாமல் எங்களுக்கு பணம் இல்லாமல் போய்விட்டது. நானே ரொம்ப கஷ்டப்படுகிறேன் என சொல்ல கண்ணன் பாட்டி சொன்னதை கேட்டு வருத்தப்படுகிறார். கண்ணன் அந்த பாட்டியிடம் கவலைப்படாமல் இருங்கள் என சொல்லிவிட்டு செலவிற்கு பணம் கொடுத்துவிட்டு செல்கிறார். பின் கண்ணன் கிளம்ப பாட்டி நீ நன்றாக இருக்க வேண்டும் என வாழ்த்தி அனுப்புகிறார். பின் கண்ணன் பேங்க் செல்ல அங்கே மேனேஜர் பயங்கரமாக திட்டுகிறார்.

பணம் வசூலிக்காமல் ஏன் வந்தாய் என கேட்க, அந்த பாட்டியை பார்த்தால் எனக்கு பாவமாக இருந்ததாக கண்ணன் சொல்கிறார். அடுத்த முறை விவசாயம் நடக்கும் போது கண்டிப்பாக கட்டிவிடுவார்கள் என கண்ணன் சொல்ல, ஆனால் இப்படி எல்லாரும் பேசினால் நான் எப்படி பேங்க் நடத்துவது என கேட்டு சத்தம் போடுகிறார். பின் தனம் ஐஸ்வர்யாவிடம் கடையில் வாங்க வேண்டிய பொருள்களை பற்றி பேச, கண்ணன் சோகமாக இருக்கிறார். தனம் கயலிடம் நீயும் நல்ல வேலைக்கு போக வேண்டும் என சொல்ல, கண்ணன் நீயும் என்னை போல கஷ்டப்பட வேண்டாம் என சோகமாக சொல்கிறார்.

பின் மீனா சீக்கிரமாக ஆபிசர் ஆகிவிடு என சொல்ல, தனம் ஆமாம் சீக்கரம் நீ ஆபிசர் ஆக வேண்டும் என சொல்கிறார். பின் முல்லை கடைக்கு லோக்கல் டிவியில் இருந்து வருகின்றனர். முருகன் சாப்பிட்டுவிட்டு போக சொல்ல, அப்போது கதிர் வந்து பேசுகிறார். அந்த சேனல் ஆட்கள் கதிரிடம் பேட்டி எடுக்கின்றனர். ஆனால் கதிர் வெளியே காத்திருங்கள் நான் வேலையை முடித்துவிட்டு வருகிறேன் என சொல்கிறார். மறுபக்கம் ஐஸ்வர்யா மேக்கப் பற்றி பேச கண்ணன் எதையும் காதில் வாங்காமல் இருக்கிறார். ஐஸ்வர்யா என்ன ஒரு மாதிரி இருக்கிறாய் என கேட்க, உடனே கண்ணன் அழ தொடங்கி இருக்கிறார்.

பிரமாண்டமாக தொடங்கிய ராதிகா கோபி ரிசப்ஷன், மயூராவை பார்த்து ஷாக்கான பாக்கியா – இன்றைய எபிசோட்!

ஏன் அழுகிறாய் என ஐஸ்வர்யா கேட்க மேனேஜர் திட்டியதாக கண்ணன் சொல்கிறார். ஐஸ்வர்யா அதை கேட்டு இதற்கெல்லாம் அழுவார்களா என சமாதானம் சொல்கிறார். மறுநாள் மூர்த்தி புது வீடு கட்டுவது பற்றி பேசுகிறார். அப்போது மீனாவின் அப்பா வேலைக்கு ஆட்களை அழைத்து வருகின்றார். எல்லாரும் புரியாமல் இருக்க, வீட்டில் உள்ள விரிசல்களை பார்க்க வந்ததாக அவர் சொல்கிறார். மூர்த்தி தனம் ஜனார்த்தனன் செய்வதை பார்த்து கோபப்படுகிறார். மூர்த்தி நானே பார்த்துக் கொள்வேன் என சொல்ல, நீங்களே மருத்துவமனைக்கு அலைந்து கொண்டிருக்கிறீர்கள் அதனால் தான் நான் வேலை பார்க்க வந்தேன் என சொல்கிறார். மூர்த்திக்கு ஜனார்த்தனன் பேசுவது பிடிக்கவில்லை. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!