லாபம் எடுப்பேன் என சவால் விட்ட கதிர், லோன் காசை வசூலிக்க சிரமப்படும் கண்ணன் – இன்றைய எபிசோட்!

0
லாபம் எடுப்பேன் என சவால் விட்ட கதிர், லோன் காசை வசூலிக்க சிரமப்படும் கண்ணன் - இன்றைய எபிசோட்!
லாபம் எடுப்பேன் என சவால் விட்ட கதிர், லோன் காசை வசூலிக்க சிரமப்படும் கண்ணன் - இன்றைய எபிசோட்!
லாபம் எடுப்பேன் என சவால் விட்ட கதிர், லோன் காசை வசூலிக்க சிரமப்படும் கண்ணன் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் இன்னும் 4 நாட்களில் கண்டிப்பாக லாபம் எடுத்து காட்டுவேன் என மல்லியிடம் சவால் விடுகிறார். மறுபக்கம் கண்ணன் பணத்தை வசூலிக்க செல்கிறார். பின் அக்கம் பக்கத்தினர் கதிர் வீட்டை விட்டு போனதை பற்றி பேச தனம் அதை நினைத்து வருத்தப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிரிடம் இன்னும் நான்கு நாட்கள் தான் இருப்பதாக மல்லி சொல்ல, இன்னும் 4 நாட்களில் நான் லாபம் எடுக்கிறேன் என சொல்கிறார். மல்லி கதிர் பேசியதை கேட்டு நக்கலடித்து சிரிக்கிறார். மறுபக்கம் கண்ணன் லோன் பணத்தை வசூலிக்க கஸ்டமர் வீட்டிற்கு செல்கின்றனர். அப்போது அங்கே ஒரு பாட்டி இருக்க, லோன் வாங்கியவர் யார் என கேட்கிறார். அவர் இறந்துவிட்டதாக சொல்ல, கண்ணன் நீங்க என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது பணம் வேண்டும் என சொல்கிறார். ஆனால் அந்த பாட்டி எனக்கு யாரு பணம் கொடுப்பார் என கேட்கிறார்.

நான் பணத்தை கொடுக்கும் வரை நான் இங்கே இருந்து போக மாட்டேன் என கண்ணன் சொல்ல, சரி இங்கையே இரு என சொல்லிவிட்டு பாட்டி உள்ளே செல்கிறார். பின் கண்ணன் வாசலில் அமர்ந்துவிடுகிறார். மறுபக்கம் ஐஸ்வர்யா பார்லர் பற்றி தனம் கேட்க ஐஸ்வர்யா ஆம்பளைங்க இருப்பதால் பெண்கள் வர யோசிப்பதாக சொல்கிறார். உடனே மீனா வீட்டில் யாரும் இல்லாத போது தான் ஆட்களை வர சொல்வேன் என சொல்லிவிட்டு இப்போது இப்படி பேசுகிறாய் என கேட்கிறார். நான் நடப்பதை தான் சொன்னேன் என ஐஸ்வர்யா சொல்ல, தனம் இருவரும் சண்டை போடாதீங்க என சொல்கிறார்.

ஜீவா கண்ணன் எல்லாரும் சரி என சொன்னதால் தான் பார்லர் வைத்ததாக சொல்ல, ஒரு நாள் அட்ஜஸ்ட் செய்ய முடியாதா என ஐஸ்வர்யா கேட்கிறார். மீனா இப்படி தான் நீ சொல்வாய் என கேட்க தனம் இப்படி சண்டை போட்டால் நாளை நானும் படத்திற்கு போவேன் என சொல்கிறார். பின் கண்ணன் அங்கையே இருக்க ஆனால் பாட்டி பணம் கொடுப்பதாக இல்லை. பின் தனம் ஐஸ்வர்யாவிடம் கண்ணனிற்கு என்ன சாப்பாடு கொடுத்தாய் என கேட்க, நெடில் பார்த்து ஒரு புது சாப்பாடு செய்தேன் என சொல்கிறார். மீனா அதை நானும் சாப்பிட்டு பார்த்தேன் நன்றாக இல்லை என சொல்கிறார்.

சமையல் வேலைகளை செய்யும் பாக்கியா, மண்டபத்திற்கு வந்த கோபி ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட் !

பின் கண்ணன் பணம் வாங்க அங்கையே இருக்க, பாட்டி படுத்து தூங்குகிறார். கண்ணனிற்கு பணம் கிடைப்பதாக இல்லை. மறுபக்கம் தனம் வெளியே நிற்க பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் பேசுகின்றனர். யாரு பார்லர் வைத்திருந்தால் என கேட்க, ஐசு தான் செய்வதாக சொல்கிறார். பின் கண்ணனும் அரசு வேலைக்கு போய்விட்டதாக சொல்ல, உடனே உங்க குடும்பத்திற்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என சொல்கிறார். பின் தனம் வீட்டை விற்பது பற்றி சொல்கிறார். கதிர் போனதும் உங்களுக்கு நல்லது நடந்துவிட்டது என பக்கத்து வீட்டில் இருப்பவர் சொல்ல, தனம் அவன் வந்துவிடுவான் என சொல்கிறார். கண்ணன் நீண்ட நேரம் காத்திருந்து சாப்பிட தொடங்க அந்த சாப்பாடு நன்றாக இல்லை. அதனால் பாட்டி அவருக்கு சாப்பாடு கொடுக்க, கண்ணன் பாட்டி பாசத்தில் உருகி லோன் காசு வாங்காமல் கிளம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!