மூர்த்தி திட்டியதை நினைத்து வருத்தப்படும் கண்ணன், கதிரை நினைத்து கவலைப்படும் மூர்த்தி – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி பேசியதை நினைத்து கண்ணன் வருத்தப்பட, ஜீவா கதிர் இலவச பிரியாணி கொடுப்பது பற்றி தனத்திடம் சொல்கிறார். பின் கதிர் பற்றி மூர்த்தியிடம் தனம் சொல்லி புரிய வைக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி பேசியதை நினைத்து கண்ணன் அழுது கொண்டிருக்க, ஐஸ்வர்யா வந்து ஆறுதல் சொல்கிறார். கண்ணன் எனக்கு என்ன என தெரியாது நான் வாங்கிட்டு வந்து கொடுத்தேன். அவர்களாக தான் காசு கொடுத்தார்கள் என கண்ணன் வருத்தப்படுகிறார். அண்ணன் இப்படி பேசுவார் என தெரிந்தால் நான் வாங்கிருக்கவே மாட்டேன் என கண்ணன் சொல்கிறார். சரி விடு என ஐஸ்வர்யா சொல்ல, எனக்கு அண்ணனை பார்க்கவே வருத்தமாக இருப்பதாக கண்ணன் சொல்கிறார். ஐஸ்வர்யா சரி இனிமேல் இப்படி செய்யாதே என சொல்கிறார்
பின் ஜீவா, கதிர் கடையில் இலவசமாக பிரியாணி கொடுக்கிறானாம். அவன் மீது உள்ள கோவத்தை இவன் மீது காட்டிவிட்டார் அண்ணன் என ஜீவா சொல்ல, தனம் அதிர்ச்சி அடைகிறார். ஏன் இவன் எந்த விஷயத்திற்கும் நிதானமாக யோசிக்காமல் இருக்கிறான் என தனம் கேட்க, ஜீவா நான் கேட்கலாம் என பார்த்தாலும் அண்ணன் கோபப்படுகிறார் என சொல்கிறார். தனம் கண்ணனிடம் இனிமேல் யாரவது கொடுத்தாலும் வேண்டாம் என சொல்லணும் என சொல்கிறார். மறுபக்கம் முல்லை சமைத்து கொண்டிருக்க, கதிர் வந்து பேச ஆனால் முல்லை சரியாக பேசவில்லை.
கதிர் என்ன ஆச்சு என கேட்க, வாழ்க்கையை நினைத்து கவலையாக இருப்பதாக முல்லை சொல்கிறார். என் மீது நம்பிக்கை இல்லையா என கதிர் கேட்க, எனக்கு பயமாக இருப்பதாக முல்லை சொல்கிறார். மறுபக்கம் கண்ணன் மூர்த்தி பேசியதை நினைத்து சோகமாக இருக்க, அனைவரும் சாப்பிடாமல் இருக்கின்றனர். மூர்த்தி வந்து எல்லாரையும் சாப்பிட வர சொல்ல, ஆனால் கண்ணனை மூர்த்தி கூப்பிடவில்லை. ஐஸ்வர்யா கண்ணனை கூப்பிட, அவன் வரவில்லை. ஐஸ்வர்யா அவருக்கும் சாப்பாடு வேண்டாம் என சொல்கிறார். மூர்த்தி கண்ணனை அழைத்து சாப்பிட வர சொல்ல, அண்ணன் கோவத்தில் பேசினால் அதனால் சாப்பிடாமல் இருப்பியா என கேட்கிறார்.
ராதிகா கழுத்தில் தாலி கட்டிய கோபி, மகனே இல்லை என சொன்ன ஈஸ்வரி – இன்றைய ” பாக்கியலட்சுமி” எபிசோட்!
பின் மூர்த்தி கண்ணனிற்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார். அண்ணன் தான பேசினேன் என சொல்ல, கண்ணன் உங்க மீது கோவம் இல்லை, உங்க தம்பியாக இருந்துவிட்டு நான் தவறு செய்ய கூடாது என சொல்கிறார். பின் மூர்த்தி சாப்பாடு ஊட்டிவிட, அனைவரும் மூர்த்தி பாசத்தை பார்த்து சந்தோசப்படுகிறார்கள். மூர்த்தி தூங்க முடியாமல் கஷ்டப்பட தனம் எதாவது பிரச்சனையா என கேட்கிறார். கதிர் ஏன் இப்படி இருக்கான் இலவசமாக பிரியாணி கொடுக்கிறான். யார் பேச்சையும் இப்படி கேட்காமல் இருக்கிறான் என நினைத்து வருத்தப்பட, தனம் விடுங்கள் பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்