கதிர் முடிவால் கோவத்தில் இருக்கும் முல்லை, இடம் வாங்க பணம் கொடுத்ததை கேட்டு அதிர்ச்சி அடையும் ஜனார்த்தனன் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனை வங்கி அதிகாரி லஞ்சம் வாங்க உதவி செய்கிறார். மறுபக்கம் கதிர் இலவசமாக சாப்பாடு கொடுக்க, மல்லி அவரை நக்கல் அடித்து பேசுகிறார். பின் ஜனார்த்தனன் இடம் வாங்க நிறைய பணம் கொடுத்ததை சொல்லி சத்தம் போடுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனை மேனேஜர் அழைக்க என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கேட்கிறார். அப்போது லோன் வாங்கியவர்களின் விவரங்களை பார்த்துக் கொண்டிருப்பதாக சொல்ல அதெல்லாம் பார்ப்பது முக்கியம் இல்லை, லோன் காசை வசூலிக்க வேண்டும் என மேனேஜர் சொல்கிறார். பின் வட்டி விவரங்களை கேட்க கண்ணனிற்கு தெரியவில்லை. உடனே அதெல்லாம் தெரிஞ்சு வைத்திருக்க வேண்டும் என மேனேஜர் சொல்கிறார். பின் லோன் விஷயமாக ஒருவர் வர அவரிடம் கவர் ஒன்றை மேனேஜர் வாங்கி வர சொல்கிறார். கண்ணன் வாங்கி வந்து கொடுக்க அவர் கண்ணனிற்கு பணம் கொடுக்கிறார்.
கண்ணன் வேண்டாம் என சொல்ல ஆனால் மேனேஜர் வாங்கி கொள்ள சொல்கிறார். பின் கதிர் யார் சொல்வதையும் கேட்காமல் இலவசமாக சாப்பாடு கொடுப்பதாக எழுதி பலகையை வெளியே மாட்டுகிறார். முல்லைக்கு அது பிடிக்காமல் இருக்க ஆனால் எதுவும் பேசாமல் இருக்கிறார், அந்த பலகையை பார்த்து விட்டு கஸ்டமர் சாப்பிட வருகின்றனர். உண்மையாகவே இலவசம் தான என கேட்க கதிர் ஆமாம் என சொல்கிறார். அனைவரும் சாப்பிட மல்லி இலவசம் என போர்ட் பார்த்துவிட்டு வந்து நக்கலாக பேசுகிறார். மல்லி நாளைக்கு என்னுடன் மதுரைக்கு வர ரெடியாக இருங்க என சொல்ல, முல்லை இலவசமாக சாப்பிட்டு விட்டு காசு போடுவாங்க என சொல்கிறார்.
அதெல்லாம் எப்படி போடுவாங்க என முல்லை அம்மா பேச, முல்லைக்கு கதிரை நினைத்து கோவமாக வருகிறது. கஸ்டமர் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்று விடுகின்றனர். முல்லை ஒருவர் கூட பணம் போடாததை பார்த்து வருத்தப்படுகிறார். எல்லாரும் கதிர் செய்வதை நினைத்து கோவமாக இருக்கிறார்கள், மறுபக்கம் மீனாவின் அப்பா வீட்டிற்கு வருகிறார். அவர் கயல் எங்கே என கேட்க அவள் தூங்குவதாக சொல்கிறார். அவர் பத்திரப்பதிவு பற்றி கேட்க ஜீவா 2 நாளில் வைக்க போகிறோம் என சொல்கிறார்.
யாரவது நடுவில் வர போறாங்க என கேட்க, மீனா நாம தான் முக்கால்வாசி பணம் கொடுத்தாச்சு என சொல்கிறார். இதெல்லாம் சரியாக வராது என ஜனார்த்தனன் சொல்ல 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி வாங்கி இருப்பதாக சொல்கிறார். ஆனால் அது செல்லாது என மீனாவின் அப்பா சொல்ல, சீக்கரம் பத்திரப்பதிவை முடித்துவிடுங்கள் என ஜனார்த்தனன் சொல்கிறார். பின் ஐஸ்வர்யா பணம் பற்றி அவர் பேசுகிறார் ஆனால் இன்னும் இவர் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்கவில்லை என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது .
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்