பூமி பூஜைக்கு தயாராகும் குடும்பத்தினர்.. முல்லை நகையை மீட்டு வந்த தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் கண்ணன் சேர்ந்து கட்டில் தூக்கி கொண்டு வந்து வைக்க உடனே மீனா அவர்கள் தான் படுத்து கொள்வார்கள் என சொல்கிறார். ஆனால் கதிர் மீனாவை படுக்க சொல்கிறார். மறுபக்கம் ஜீவாவும் தனமும் சேர்ந்து முல்லையின் நகையை மீட்டு கொண்டு வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிரும் கண்ணனும் சேர்ந்து கட்டிலை கஷ்டப்பட்டு சரி செய்கின்றனர். அப்போது கண்ணன் இவ்வளவு கனமாக இருப்பதாக சொல்ல, உடனே கதிர் பழைய காலத்து கட்டில் என்றால் அப்படி தான் இருக்கும் என சொல்கிறார். பின் கட்டிலை அவர்கள் தூக்கி வைப்பதை பார்த்துவிட்டு, மீனா அவங்க படுத்துக் கொள்ள போகிறார்கள் என ஜீவாவிடம் சொல்கிறார். படுத்தால் படுக்கட்டும் என ஜீவா சொல்ல, உடனே கதிர் மீனாவை அங்கையே படுக்க சொல்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
மறுநாள் எல்லாரும் புது இடத்தில் பூஜை போட கிளம்பி கொண்டிருக்கின்றனர். மூர்த்தி கடைக்கு சென்றுவிட்டு வருவதாக சொல்லிவிட்டு கிளம்ப, தனமும் ஜீவாவும் அதை வாங்கிவிட்டு வருவதாக சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். எதை வாங்க போகிறார்கள் என மீனா குழப்பத்துடன் இருக்கிறார். அப்போது ஜீவாவும் தனமும் முல்லை நகை அடகு வைத்த கடைக்கு செல்கின்றனர். அங்கே கதிர் அடகு வைத்த நகையை திருப்ப வந்திருப்பதாக சொல்ல, சீட்டு இருக்கிறதா என கடைக்காரர் கேட்கிறார். சீட்டு இல்லை என தனம் சொல்ல அப்போ எப்படி நகையை திருப்ப முடியும் என கடைக்காரர் கேட்கிறார்.
Exams Daily Mobile App Download
எங்களை உங்களுக்கு தெரியாதா என ஜீவா சொல்லி நகையை கேட்க கடைக்காரரும் கொடுக்கிறார். மறுபக்கம் முல்லையின் அம்மா அப்பா பூஜைக்காக வந்திருக்கின்றனர். அப்போது மீனா நகையுடன் வந்து நிற்க புடவையை சரி செய்ய சொல்லி முல்லையிடம் சொல்கிறார். முல்லை புடவையை சரி செய்ய பார்வதி முல்லை கழுத்தில் மட்டும் மஞ்சள் கயிறு இருப்பதை பார்த்து வருத்தப்படுகிறார். பின் முருகனிடம் இது பற்றி சொல்ல, நல்ல காரியத்திற்கு வந்து தேவை இல்லாமல் பேசி சண்டையை இழுக்காதே என முருகன் சொல்கிறார். பின் மூர்த்தி கதிர் வந்துவிட தனம் எங்கே என கேட்கின்றனர். அப்போது தனம் இதோ வந்துவிட்டேன் என சொல்கிறார். மூர்த்தி எங்கே சென்றாய் என கேட்க, முல்லையின் நகையை கொடுத்து இதை வாங்க சென்றதாக தனம் சொல்கிறார். முருகன் குடும்பத்தின் ஒற்றுமையை பார்வதியிடம் சுட்டி காட்டுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.