மழையில் இருந்து பொருள்களை காக்க கதிர், ஜீவா செய்த காரியம்.. மீனா கஷ்டப்படுவதை பார்த்து கவலைப்படும் ஜனார்த்தனன் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிரும், ஜீவாவும் இணைந்து மழையில் இருந்து பொருள்களை எல்லாம் பாதுகாப்பாக வைக்கின்றனர். மறுபக்கம் மீனா கஷ்டப்படுவதை பார்த்து ஜனார்த்தனன் கேள்வி கேட்கிறார். எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் என மீனா பதில் சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் முல்லை வீட்டில் இருக்கும் நிலைமையை நினைத்து வருத்தப்படுகின்றனர். பின் முல்லை இதற்கு தான் பெரிய வீடாக சென்று இருக்கலாம் என எல்லாரும் சொன்னார்கள். அதை செய்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது என சொல்கிறார். கதிர் வீடு கிடைத்தால் சென்றிருக்கமாட்டோமா, வீட்டில் இருப்பவர்களுக்கு வாடகை வீட்டில் இருந்து பழக்கம் இல்லை, அதனால் தான் யோசித்தேன் என கதிர் சொல்கிறார். அப்போது ஜீவா வர, பயங்கரமாக மழை வருவது போல இருக்கிறது. உடனே ஜீவா தார் பாய் எதாவது இருக்கிறதா என கேட்க கதிர் அதை எடுத்துக் கொண்டு வருகிறார்.
Follow our Instagram for more Latest Updates
பின் இருவரும் சேர்ந்து கஷ்டப்பட்டு செட் போல தயார் செய்கின்றனர். இனி மழை பெய்தாலும் பிரச்சனை இல்லை என நினைத்து தூங்க செல்கின்றனர். மறுநாள் காலையில் தனம் எழுந்து வந்து பொருள்களை எல்லாம் பார்க்க வருகிறார். அப்போது ஜீவா என்ன அண்ணி பொருள்கள் நனைந்துவிட்டதா என பார்க்க வந்தீங்களா எனகேட்க, ஆமாம் இரவெல்லாம் மழை பெய்தது, நீங்க தான் இப்படி செய்தீர்களா என கேட்க ஆமாம் என ஜீவா சொல்கிறார். கவலைப்படாதீங்க அண்ணி என ஜீவா சொல்ல, எல்லாரும் சேர்ந்து இருக்கும் வரை எனக்கு கவலை இல்லை என தனம் சொல்கிறார். பின் குடும்பத்தில் அனைவரும் வந்து செட்டை பார்த்து சந்தோசப்படுகின்றனர்.
யார் இப்படி எல்லாம் போட்டா என தெரியாமல் இருக்க மீனா ஒருவேளை என் அப்பாவாக இருக்குமோ என சொல்கிறார். உடனே முல்லை கதிரும், ஜீவாவும் தான் போட்டதாக சொல்கிறார். மூர்த்தி நல்ல வேலை செய்ததாக சொல்கிறார். பின் ஐஸ்வர்யா பாத்திரம் கழுவ, அப்போது தண்ணீர் வராமல் இருக்கிறது. தனம் முல்லையிடம் சொல்ல, முல்லை ரோடு பைப்பில் தண்ணீர் பிடிக்கலாம் என சொல்கிறார். முல்லை நான் சென்று தண்ணீர் கொண்டு வருகிறேன் என சொல்ல, தனம் வேண்டாம் நானும் வருகிறேன் என சொல்கிறார். அதன் பின் நீயும் மீனாவும் சென்று தண்ணீர் பிடித்துவிட்டு வாருங்கள் என தனம் சொல்கிறார்.
மீனாவும் ஐஸ்வர்யாவும் தண்ணீர் பிடித்துவிட மீனாவால் தூக்கவே முடியவில்லை. அப்போது ஜனார்த்தனன் அதை பார்த்து, இதற்கு தான் அவனை கல்யாணம் செய்து கொண்டாய் என கேட்கிறார். தேவை இல்லாமல் பேசாதீங்க என மீனா சொல்ல, உன்னை எப்படி எல்லாம் வளர்த்தேன் ஆனால் நீ அவங்களுடன் சேர்ந்து கொண்டு இப்படி செய்கிறாய் என கேட்க, அந்த வீட்டை விட்டு வெளியே போக சொன்னீங்க அப்போ அசிங்கமாக இல்லையா என மீனா கேட்க, நான் உன்னை என்னுடன் வர சொன்னேன் நீ அதை செய்யவில்லை என ஜனார்த்தனன் சொல்கிறார்.
பிக்பாஸ் வீட்டில் ஏழாவது வாரத்தில் வெளியேறும் போட்டியாளர் இவர் தான் – ரசிகர்கள் ஷாக்!
அன்னைக்கு என் குடும்பத்தில் அனைவரும் வீட்டை விட்டு வெளியே போவாங்க ஆனால் நான் உங்களுடன் வர முடியுமா என மீனா சொல்கிறார். எனக்கு அதெல்லாம் தேவை இல்லை என மீனா சொல்ல, ஜனார்த்தனன் உன்னை பார்த்தால் எனக்கு ரத்த கண்ணீர் வருகிறது. பொம்பள புள்ளை வைத்து இருக்கிறாய் என சொல்கிறார். நீங்க எல்லாம் தெரிந்து கொண்டே தான் செய்தீர்கள். இந்த குடும்பம் நீங்க செய்ததற்கு எல்லாம் என்னை ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை என சொல்கிறார். என் பக்கம் நியாயம் இருக்கிறது என ஜனார்த்தனன் சொல்ல, நீங்க சொன்ன வார்த்தையை காப்பாற்ற முடியவில்லை எனக்கு அவங்க தான் முக்கியம் என மீனா சொல்கிறார். இந்த வாழ்க்கைக்கு நீங்க தான் காரணம் என மீனா சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.