ஹோட்டலை கவனிக்க தனம் சொன்ன புது திட்டம்.. மீனாவின் தங்கையை பெண் கேட்ட மல்லி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனாவின் தங்கை ஸ்வேதாவை பிரசாந்திற்கு பொண்ணு கேட்கிறார். மறுபக்கம் தனம் குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக புது ஐடியா ஒன்றை சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனாவின் தங்கை ஸ்வேதாவை பிரசாந்திற்கு மல்லி பொண்ணு கேட்கிறார். அதை கேட்டு மீனாவின் அப்பா அதிர்ச்சி அடைகிறார். முறை எதுவும் இல்லை என மீனாவின் அம்மா சொல்ல, பிரசாந்த் மல்லி பெற்ற மகன் இல்லை என கஸ்தூரி சொல்கிறார். ஆனால் மல்லி அவன் எனக்கு பெற்ற மகன் போல தான் என சொல்கிறார். அப்போது மீனாவின் அப்பா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் இதற்கு சம்மதிக்கமாட்டார்கள் என சொல்ல, அவங்க ஏன் சம்மதிக்க வேண்டும், உங்களுக்கும் வசதி இருக்கிறது. எனக்கும் வசதி இருக்கிறது அதனால் நாம சம்மதம் செய்தால் சரியாக இருக்கும் என சொல்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
பின் ஸ்வேதா அப்பாவிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என மீனாவின் அப்பா சொல்ல, மல்லி சரி என சொல்கிறார். மறுபக்கம் முல்லை எல்லாருக்கும் மோர் கொடுத்து நன்றாக பார்த்துக் கொள்கிறார். அப்போது எல்லாரும் சேர்ந்து சமைக்கலாம் என சொல்ல, மீனா அப்போது கயல் கை முழுவதும் கொசு கடித்து இருப்பதாக சொல்கிறார். அப்போது பார்வதி இங்கே இருக்க முடியவில்லை என்றால் அம்மா வீட்டிற்கு போக வேண்டியது தான என சொல்கிறார். பின் முருகன் வர பார்வதியை வீட்டிற்கு கிளம்ப சொல்கிறார். முல்லையும் ட்ரெஸ் எடுத்து வைப்பதாக சொல்ல, பார்வதி தேவை இருக்கும் வரை நாங்க தேவைப்பட்டோம் இப்போ தேவைப்படவில்லை என கேட்கிறார்.
பின் தனம் ஏன் அவங்களை போக சொல்கிறாய் என கேட்க, முல்லை அவங்க போகட்டும் என சொல்கிறார். பின் முல்லை நான் மட்டும் தான் சமைப்பேன் என சொல்ல, தனம் சேர்ந்து சமைக்கலாம் என சொல்கிறார். அதன் பின் இரவு எல்லாரும் கதிருக்காக காத்திருக்க, தனம் காலையில் சென்றுவிட்டு இரவு வரை வேலை செய்வது கஷ்டம் என சொல்கிறார். பின் எல்லாரும் வேலை முடிந்து வரும் போது சாப்பாடு தயாராக இருக்க வேண்டும் அதனால் நான் சமைக்கிறேன் என தனம் சொல்ல, ஆனால் மீனா கடையில் இருந்து எடுத்து வரலாம் என சொல்கிறார். ஆனால் தனம் வேண்டாம் என சொல்கிறார்.
சென்னையில் நேற்று (நவ. 21) கடுமையான குளிர்.. பொதுமக்கள் அச்சம் – காரணம் இதுவா?
அதன் பின் ஆண்கள் எல்லாரும் கடையில் இருந்து வந்துவிடுகிறார்கள். கதிர் கடை பற்றி கேட்க தனம் கதிரை கடைக்கு போக சொல்கிறார். அப்போது மூர்த்தி கதிரையும் கடைக்கு வர சொல்கிறார். ஆனால் கதிர் யோசிக்க தனம் புது ஹோட்டலை தொடங்கி இருக்கிறான் அதனால் தான் யோசிப்பதாக சொல்கிறார். மீனா ஹோட்டலை மூடலாம் என சொல்ல, ஆனால் தனம் வேண்டாம் என சொல்கிறார். உடனே தனம் புது திட்டம் ஒன்றை சொல்கிறார். அதில் ஆண்கள் எல்லாருக்கும் கடைக்கு போகலாம். ஹோட்டலை பெண்கள் பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார். எல்லாரும் இது நல்ல திட்டம் என நினைக்கின்றனர். ஆனால் மூர்த்தி வேண்டாம் என சொல்ல, ஆனால் ஜீவா ஆசையாக கேட்கிறார்கள் பண்ணட்டும் என சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.