மீனாவின் தங்கையை பெண் கேட்ட மல்லி.. மொத்த குடும்பத்தையும் குறை சொல்லும் பார்வதி -இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், பார்வதி மல்லி, கஸ்தூரி குடும்பம் பிரிந்துவிட்டது பற்றி பேச அதை மீனா கேட்டு கோபப்படுகிறார். பின் முல்லை அம்மாவை அழைத்து செல்லும்படி முருகனிடம் சொல்கிறார். அதன் பின் மல்லி மீனா அப்பாவிடம் மீனாவின் தங்கையை பிரசாந்திற்கு பெண் கேட்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், பார்வதி மல்லியிடம் முல்லை பணத்தை வாங்கி கொண்டு தனியாக இல்லாமல் இப்போது எல்லாரையும் அழைத்து கொண்டு வந்து கஷ்டப்படுவதாக சொல்கிறார். அப்போது மல்லி, கஸ்தூரி அவங்க தான் பெரிய குடும்பம் என பேசுனாங்க இப்போ எல்லாம் போய்விட்டது என நக்கலாக பேசுகின்றனர். கஸ்தூரிக்கு வந்த 4 மருமகள்களில் 3 பேர் என்னுடைய சொந்தக்காரர்கள் ஒருத்தி தான் வேற ஆள் அதனால் தான் குடும்பம் உடைந்துவிட்டது என சொல்கிறார். அதை மீனா கேட்டுவிட அவரால் தான் எல்லாம் நடப்பதாக நினைத்து வருத்தப்படுகிறார்.
Follow our Instagram for more Latest Updates
பின் பெண்கள் அனைவரும் சமைத்து கொண்டிருக்க, மீனா அழுது கொண்டிருக்க, தனம் வெங்காயம் அறுத்து முடித்துவிட்டோம் மீண்டும் ஏன் கண்ணில் தண்ணீர் வருகிறது என கேட்கிறார். அப்போது மீனா முல்லை உன் அம்மாவிற்கு நான் இங்கே வந்தது பிடிக்கவில்லை போல என சொல்கிறார். ஏன் அவங்க எதாவது சொன்னார்களா என கேட்க, அவங்க சொல்லவில்லை ஆனால் அவங்க பேசியதை நான் கேட்டேன். என் வீடு எவ்வளவு பெரியது அதை எல்லாம் விட்டு நான் இங்கே வந்து கஷ்டப்படுகிறேன் என வருத்தப்பட்டு அழுகிறார். அப்போது ஐஸ்வர்யா பெரியம்மா எப்படி பேசுவார்கள் என தெரிந்தும் அவங்க பேசியதை ஏன் கேட்டீர்கள் என சொல்கிறார்
Exams Daily Mobile App Download
முல்லையும் நீங்க எல்லாரும் நினைத்தால் பெரிய வீட்டிற்கு சென்று இருக்கலாம். ஆனால் எனக்காக தான வந்தீர்கள் அதனால் எனக்கு சந்தோசம் தான் என சொல்கிறார். எங்க அம்மா செய்தது தப்பு தான் என முல்லை சொல்ல, எல்லாருக்கும் போக இடம் இருக்கிறது, ஆனால் எல்லாரும் ஒன்றாக இருப்பது தான் சந்தோசம் என தனம் சொல்கிறார். முல்லை அம்மா நடந்து கொள்வது சரி இல்லை என நினைக்கிறார்.பின் முல்லை ஹோட்டலிற்கு வருகிறார். கதிர் எல்லாம் நல்லா இருக்கா அங்கே ஒன்னும் பிரச்சனை இல்லையே என கேட்க முல்லை அதெல்லாம் இல்லை என சொல்கிறார். பின் முல்லை அம்மாவை நம்ம வீட்டிற்கு கூட்டிக் கொண்டு செல்லுங்கள் என முருகனிடம் சொல்கிறார்.
ஏன் அவள் சண்டை போட்டாளா என கேட்க, முல்லை இப்போதைக்கு இல்லை ஆனால் அதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார். முல்லை அம்மாவை அழைத்து கொண்டு செல்லுங்கள் என சொல்ல, முருகன் நான் வரலாமா என கேட்கிறார். அப்போது முல்லை தவறாக நினைக்க வேண்டாம் எனக்கு வேற வழி தெரியவில்லை என சொல்கிறார். நாங்க கூப்பிட்டதும் எல்லாரும் எங்களுடன் வந்துவிட்டார்கள். அம்மா அவர்களை எதாவது சொல்லி வருத்தப்பட வைப்பதாக சொல்கிறார். பின் கதிர் வர முருகன் அழுவதை பார்த்து என்ன ஆச்சு என கேட்கிறார். ஆனால் ஒன்றுமில்லை என சொல்லி முல்லை சமாளிக்கிறார்.
பின் மல்லி, மீனாவின் அப்பா வீட்டிற்கு செல்கின்றார். அப்போது மீனா அப்பா என்ன திடீரென இங்கே வந்து இருக்கீங்க என கேட்க, நீங்க செய்த நல்ல காரியத்தை பாராட்ட தான் வந்தோம் என சொல்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதை பாராட்ட தான் வந்தோம் என சொல்கிறார். அதனால் நியாயம் கேட்க வந்தீர்களா என கேட்க ஆனால் மல்லி இல்லை என சொல்லி, அவங்களுக்கு இப்படி செய்தால் தான் திமிர் அடங்கும் என சொல்கிறார். பின் மீனா அப்பாவிடம் மல்லி நல்ல விதமாக பேசுகிறார். பின் பிரசாந்த்திற்கு மீனாவின் தங்கைக்கும் கல்யாணம் செய்யலாமா என மல்லி பெண் கேட்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.