குடும்பத்திற்கு வில்லனாக மாறிய ஜனார்த்தனன்.. வீட்டை விட்டு போக முடிவு எடுத்த மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜனார்த்தனன் மூர்த்தியை வீட்டை விட்டு காலி செய்ய சொல்ல, உடனே மூர்த்தி வீட்டை காலி செய்ய முடிவு செய்கிறார். கதிர் நம்ம வீட்டிற்கு போவோம் என அழைக்க, அனைவரும் வீட்டை விட்டு கதிர் வீட்டிற்கு செல்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் ஜனார்தனனை இதற்கு மேல் பேசினால் நான் என்ன செய்வேன் என தெரியாது என சொல்ல, உடனே ஜனார்த்தனன் உன்னால் முடிந்ததை செய் என சொல்கிறார். பின் கதிர் அண்ணா என்ன செய்ய வேண்டும் என சொல்லுங்கள் என சொல்ல, மூர்த்தி இதற்கு மேல் இந்த வீட்டில் இருந்தால் நான் என் குடும்பத்திற்கு செய்யும் அவமானம் என சொல்கிறார். தேவை இல்லாமல் பேசாதே எப்போது வீட்டை காலி செய்வாய் என ஜனார்த்தனன் கேட்க, தனத்திற்கு மயக்கம் வருகிறது. உடனே ஜனார்த்தனன் சரியான நாடக கும்பல் என சொல்கிறார். அதை கேட்டு மூர்த்திக்கு கோவம் வருகிறது. அவர் இந்த நிமிஷமே வீட்டை காலி செய்கிறேன் என சொல்கிறார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
முருகன் மாப்பிள்ளை கொஞ்சம் யோசித்து கொள்ளுங்கள் என சொல்ல, கதிர் வாங்க அண்ணா எங்க வீட்டிற்கு போகலாம் என சொல்கிறார். உடனே பெரிய வசந்த மாளிகை என சொல்ல கதிருக்கு கோவம் வருகிறது. இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசினால் நான் சும்மா இருக்கமாட்டேன் என சொல்ல, என்ன செய்வாய் என ஜனார்த்தனன் கேட்கிறார். ஜீவா இதற்கு மேல் பேசினால் எல்லாம் செய்வோம் என சொல்கிறார். பின் கதிர் ராசி சரி இல்லை என சொல்ல, உடனே ஜீவா வாய்யை மூடு என சொல்கிறார். பின் மீனா ஜனார்தனனை முறைக்க, நீ ஏன் அப்பாவை முறைத்து பார்க்கிறாய், நீ என்னுடன் வா என சொல்கிறார்.
மீனா என் வாய்யை கிளறாதீங்க என சொல்கிறார். பின் மூர்த்தி தனத்தை தேவையான பொருள்களை எடுத்துக் கொண்டு கிளம்ப சொல்கிறார். கதிர் கண்ணனை வண்டிக்கு சொல்ல சொல்கிறார். பின் தனம் வீட்டை நினைத்து வருத்தப்படுகிறார். மூர்த்தி குடும்பத்தில் சந்தோசமாக இருந்த நாட்களை எல்லாம் நினைத்து பார்க்கிறார். மீனா கூட இந்த வீட்டில் இருந்த நாட்களை நினைக்கிறார். மேலும் ஐஸ்வர்யா பார்லரை பார்த்து வருத்தப்படுகிறார்.
தமிழகத்தில் இன்று (நவம்பர் 14) விடுமுறை விடப்பட்ட பள்ளிகளின் விவரம் – மாணவர்கள் கவனத்திற்கு..!
எல்லாரும் தேவையான பொருள்களை எடுத்துக் கொண்டு கிளம்ப, மீனா பயங்கரமாக அழுகிறார். ஜீவாவிடம் என் அப்பா இப்படி வில்லனாக இருப்பார் என நான் நினைத்து பார்க்கவே இல்லை என சொல்ல, மீனாவிற்கு ஜீவா ஆறுதலாக இருக்கிறார். பின் கதிர் மூர்த்திக்கு ஆறுதல் சொல்கிறார். கண்ணனும் ஐஸ்வர்யாவும் இந்த குடும்பத்தில் இருந்த சந்தோஷமான நாட்களை நினைத்து அழுகிறார். ஜனார்தனனும் கலையும் நடு ஹாலில் அமர்ந்து இருக்க, மூர்த்தி குடும்பத்துடன் வெளியே கிளம்புகிறார். அவர்களுடன் மீனாவும் கிளம்ப மீனா தன்னுடைய அப்பாவை பார்த்து முறைக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.