தனம் மூர்த்திக்கு சப்ரைஸ் செய்த குடும்பத்தினர்.. நகை வாங்கி கொடுத்த முல்லை, மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
தனம் மூர்த்திக்கு சப்ரைஸ் செய்த குடும்பத்தினர்.. நகை வாங்கி கொடுத்த முல்லை, மீனா - இன்றைய
தனம் மூர்த்திக்கு சப்ரைஸ் செய்த குடும்பத்தினர்.. நகை வாங்கி கொடுத்த முல்லை, மீனா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
தனம் மூர்த்திக்கு சப்ரைஸ் செய்த குடும்பத்தினர்.. நகை வாங்கி கொடுத்த முல்லை, மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், பாண்டியன் பிறந்தநாளுக்காக அனைவரும் அலங்காரம் செய்து வேலைகளை செய்கின்றனர். பின் தனம் மூர்த்திக்கு சப்ரைஸ் செய்கின்றனர். தனம் அவர்களின் பாசத்தை நினைத்து சந்தோசப்படுகிறார். மறுபக்கம் சொந்தங்கள் பாண்டியனுக்கு பரிசுகளை கொடுக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜீவா வீட்டிற்கு வர கண்ணன் பாலூன் எல்லாம் ஊதி அலங்காரம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது ஜீவா முல்லை வர, அக்காவை சமாளித்துவிட்டு வருவது கஷ்டமாக இருந்ததாக சொல்கிறார். பின் ஜீவா மீனா ட்ரெஸ் நகை எல்லாம் வாங்க கிளம்புகின்றனர். மறுபக்கம் தனம் ஹோட்டலில் இருக்க பாயாசம் வைக்க போனவர் எங்கே என கேட்கிறார். அப்போது ஐஸ்வர்யா வந்துவிடுவார்கள் என சொல்கிறார். பின் தனம் வீட்டிற்கு போய்விட்டு வருகிறேன் என சொல்ல, ஆனால் ஐஸ்வர்யா நான் தனியாக இருக்கமாட்டேன் என சொல்கிறார். அப்போது முருகன் வர பாண்டியன் பிறந்தநாளுக்கு என்ன சிறப்பு என கேட்கிறார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அப்போது தனம் வீடு வசதியாக இல்லை, சின்ன வீடு என வருபவர்கள் எதாவது சொல்வார்கள், பின் புது வீட்டிற்கு சென்றுவிட்டு கொண்டாடலாம் என சொல்கிறார். ஆனால் முருகன் என்ன இருந்தாலும் முதல் பிறந்தநாள் என சொல்ல, ஆனால் தனம் வேண்டாம் என சொல்கிறார். பின் முருகன் தனத்தை வீட்டிற்கு போக சொல்ல, ஆனால் ஐஸ்வர்யா தனத்தை போக விடாமல் தடுக்கிறார். பின் எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட, அண்ணன் அண்ணியை வர சொல்லலாம் என சொல்கின்றனர். பின் இருவரும் வர அலங்காராத்தை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். அவர்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றனர்.

எல்லாரும் அமைதியாக இருந்து இப்படி வேலை செய்துவிட்டீர்கள் என மூர்த்தி சொல்கிறார். தனம் ஹோட்டலில் கூடி கூடி பேசினார்கள், அது இது தான் என எனக்கு இப்போது தான் தெரிவதாக தனம் சொல்கிறார். பின் தனத்தின் அம்மா மற்றும் அண்ணன் அண்ணி வருகின்றனர். அவர்கள் பாண்டியனுக்கு வாழ்த்து சொல்கின்றனர். பின் தனம் உங்களை யார் அழைத்தா என கேட்க நாங்க தான் என முல்லை சொல்கிறார். பின் அவர்கள் பாண்டியனுக்கு பரிசு கொடுக்கின்றனர். அதன் பின் முருகன் வருகிறார். அவரும் பாண்டியனுக்கு பரிசு கொடுக்கிறார்.

தேர்தலில் நிற்க முடிவு செய்த பாக்கியா.. ராதிகாவை போட்டியாக நிற்க வைக்கும் கோபி – இன்றைய எபிசோட்!

பின் கஸ்தூரி வீட்டை பற்றி பேச அனைவரும் வருத்தப்படுகின்றனர். பார்வதி ஆரம்பித்துவிட்டதாக சொல்ல, உடனே இதுவும் எங்க வீடு தான் என சொல்கிறார். பின் கஸ்தூரியை ஜெகா அமைதியாக இருக்க சொல்கிறார். அதன் பின் அண்ணாச்சி வந்து பாண்டியனை கொஞ்சுகிறார். அதன் பின் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டு தங்களது மகிழ்ச்சியை கொண்டாடுகின்றனர். அதன் பின் மீனாவும், முல்லையும் பாண்டியனுக்கு நகை போடுகின்றனர். தனம் எதற்கு அதெல்லாம் என கேட்க ஆனால் ஜீவா இதை கூட செய்யாமல் நாங்க எப்படி இருக்க முடியும் என கேட்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!