பாண்டியன் பிறந்தநாளை சிம்பிளாக கொண்டாட நினைக்கும் தனம்.. சப்ரைஸ் செய்ய திட்டமிடும் குடும்பம் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், குடும்பத்தினர் அனைவரும் பேசிக் கொண்டிருக்க, நாளை பாண்டியன் பிறந்தநாள் என அனைவருக்கும் நியாபகம் வருகிறது. பாண்டியன் பிறந்தநாளை நன்றாக கொண்டாட வேண்டும் என நினைக்க, ஆனால் தனம் எல்லாரையும் அழைத்தால் தேவை இல்லாத பிரச்சனை வரும் என சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி குடும்பத்துடன் பேசிக் கொண்டிருக்க, அப்போது முல்லை நாளைக்கு எதோ நல்ல நாள் என நினைக்கிறார். அப்போது மீனா ஆமாம் எனக்கும் எதோ நல்ல நாள் என தோன்றுவதாக சொல்கிறார். அப்போது கதிர் நாளைக்கு பாண்டியன் முதல் பிறந்தநாள் என சொல்கிறார். அனைவரும் பாண்டியனின் பிறந்தநாளை மறந்ததை நினைத்து வருத்தப்படுகின்றனர். பாண்டியன் பிறந்தநாளை நன்றாக கொண்டாட வேண்டும் என முல்லை சொல்ல, மீனாவும் ஆமாம் என சொல்கிறார். அப்போது தனம் அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
உங்களுடைய அம்மாவை எல்லாம் கூப்பிட வேண்டும் என முல்லை சொல்ல, ஆனால் தனம் அதெல்லாம் வேண்டாம் வீட்டிற்கு யாரையாவது கூப்பிட வேண்டும் என நினைத்தாலே பயமாக இருப்பதாக சொல்கிறார். கோவிலுக்கு சென்று வருவோம் பின் வீட்டில் பாயாசம் செய்து கொண்டாடினால் போதும் என தனம் சொல்ல, மூர்த்தி அதுவும் சரி தான் என சொல்கிறார். அப்போது மீனா ஒரு கேக் வெட்ட வேண்டாமா என கேட்க, ஆனால் தனம் கேக் வெட்டினால் என் வீட்டில் எல்லாரையும் கூப்பிட வேண்டும் என சொல்கிறார். அதனால் எதுவும் வேண்டாம் என சொல்கிறார்கள்.
பின் அனைவரும் தனியாக பேசிக் கொண்டிருக்கின்றனர். முல்லை பாண்டியன் பிறந்தநாளை நன்றாக கொண்டாட வேண்டும் என சொல்கிறார். கதிர் யாராவது வீட்டிற்கு வந்தால் வீடு சின்னதாக இருக்கும் என எதாவது சொல்வார்கள் என அண்ணி நினைப்பதாக சொல்கிறார். அப்போது முல்லை அதெல்லாம் இல்லை என சொல்கிறார். மறுபக்கம் ஐஸ்வர்யா கண்ணனும் பாண்டியன் 15 வருஷம் கழித்து பிறந்த பையன் அவன் பிறந்தநாளை நல்லபடியாக கொண்டாட வேண்டும். அலங்காரம் எல்லாம் நாம பார்த்துக் கொள்வோம் என சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
அதன் பின் மீனா பாண்டியன் பிறந்தநாளை கயல் பிறந்தநாள் போல கொண்டாட வேண்டும் நகை எதாவது போடலாம் என சொல்ல, ஆனால் நகை எல்லாம் வேண்டாம் என ஜீவா சொல்கிறார். பின் மீனா எதாவது திட்டமிட வேண்டும் என சொல்கிறார். மறுநாள் தனம் பாண்டியன் உடன் கோவிலுக்கு கிளம்பி வருகிறார். அப்போது கண்ணன் பாண்டியனை தூக்கி கொஞ்சிவிட்டு கொடுக்கிறார். தனம் மூர்த்தி கோவிலுக்கு கிளம்ப மற்றவர்கள் எப்போது இருவரும் கிளம்ப போவதாக கேக்கின்றனர். அப்போது தான் எல்லாரும் பாண்டியன் பிறந்தநாளை நல்லபடியாக கொண்டாட நினைத்தது தெரிய வருகிறது. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது