நல்லபடியாக முடிந்த பூமி பூஜை.. மீனா அப்பாவை சந்தித்த மல்லி மற்றும் கஸ்தூரி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் பூமி பூஜை நடந்த பின் அனைவரும் வீட்டை பற்றி சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அதன் பின் மல்லியும் கஸ்தூரியும் ஜனார்தனனை பார்த்து உங்களை விட்டு விட்டு நன்றாக பூஜை நடத்தியதாக சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், பூமி பூஜை நல்லபடியாக முடிந்துவிட அனைவரும் வீட்டை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கஸ்தூரி சின்ன வீடா பெரிய வீடா என கேட்க, மீனா ஐஸ்வர்யா அவர்களை நக்கல் அடித்து பேசி சிரித்துக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கம் கஸ்தூரியும் மல்லியும் ஜனார்த்தனனை பார்க்க சென்று இருக்கின்றனர். அப்போது பூஜை நல்லபடியாக முடிந்தது உங்களை தான் கூப்பிடவே இல்லையே என கஸ்தூரி சொல்கிறார். வீடு கட்டுவது என்ன சாதாரணமா விஷயமா எப்படி கட்டுகிறார்கள் என பார்க்கிறேன் என சொல்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
பின் மல்லி பிரசாந்த் உடன் கல்யாணம் பற்றி கேட்க, ஜனார்த்தனன் உங்களை பற்றி விசாரித்தேன். ஜாதகம் பார்ப்போம் என சொல்கிறார். மறுபக்கம் எல்லாரும் கதிர் கடைக்கு சாப்பிட செல்கின்றனர். அங்கே எல்லாரும் கடைக்கு புதிதாக வந்தது போல நடந்து கொள்ள எல்லாரும் கடைக்கு திறப்பு விழாவிற்கு வந்த உண்மை தெரிய வருகிறது. பின் கதிர் எல்லாருக்கும் டீ போட்டு கொடுக்க அனைவரும் சந்தோசமாக கடையில் இருக்கின்றனர். பின் ஹோட்டலை பெண்கள் நடத்துவது சரியாக வராது என மூர்த்தி சொல்கிறார்.
கோபி வீட்டிற்கு மீண்டும் சென்ற இனியா.. செகரட்டரி தேர்தலில் நிற்க போகும் பாக்கியா – இன்றைய எபிசோட்!
Exams Daily Mobile App Download
பார்வதி அதை கேட்டு இப்போது தான் சரியாக பேசி இருப்பதாக சொல்கிறார். ஆனால் முல்லை ஏன் மாமா இப்படி சொல்றீங்க என கேட்க, தனம் எங்க மீது நம்பிக்கை இல்லையா என கேட்கிறார். பின் ஜீவா கதிர் அதெல்லாம் நன்றாக வியாபாரம் செய்துவிடுவார்கள் நீங்க கவலைப்படாதீங்க என சொல்கிறார். பின் தனம் மூர்த்தியிடம் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என நினைக்கவேண்டாம் என சொல்கிறார். பின் ஜீவா நம்ம கடையும் பக்கத்தில் தான் இருக்கிறது அதனால் பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மறுபக்கம் கண்ணன் வேலை செய்யும் இடத்தில் வயதானவருக்கு உதவி செய்கிறார். அப்போது கண்ணன் நீங்க பணத்தை கொடுப்பது போல கொடுங்கள் அப்பறம் எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். கண்ணன் என்னை நம்புங்கள் எல்லாம் சரியாக வரும் என சொல்கிறார். அந்த முதியவர் பணத்தை கொடுக்க செல்ல, உடனே கண்ணன் யாருக்கோ போன் செய்து விவரத்தை சொல்கிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.