சூப்பர் மார்க்கெட்டை காலி செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. திட்டம் பற்றி மல்லியிடம் சொன்ன ஜனார்த்தனன் – இன்றைய எபிசோட்!

0
சூப்பர் மார்க்கெட்டை காலி செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. திட்டம் பற்றி மல்லியிடம் சொன்ன ஜனார்த்தனன் - இன்றைய எபிசோட்!
சூப்பர் மார்க்கெட்டை காலி செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. திட்டம் பற்றி மல்லியிடம் சொன்ன ஜனார்த்தனன் - இன்றைய எபிசோட்!
சூப்பர் மார்க்கெட்டை காலி செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. திட்டம் பற்றி மல்லியிடம் சொன்ன ஜனார்த்தனன் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜனார்த்தனன் தன்னுடைய திட்டம் குறித்து மல்லி மற்றும் கஸ்தூரியிடம் சொல்கின்றனர். அந்த குடும்பத்தை பிரிக்கவே முடியாது என கஸ்தூரி சொல்ல, ஆனால் ஜனார்த்தனன் நான் அந்த குடும்பத்தை பிரிப்பேன் என சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கஸ்தூரி மற்றும் மல்லி தனத்திடம் பேச வருகின்றனர். அப்போது வீட்டில் யாரும் இல்லையா என கேட்க, அவங்க எல்லாரும் கடைக்கு சென்று இருப்பதாக சொல்கிறார். கஸ்தூரி கடையே இல்லை அப்பறம் என்ன என கேட்க, உடனே முல்லை சூப்பர் மார்க்கெட் காலி செய்ய சென்று இருப்பதாக சொல்கிறார். பின் கஸ்தூரி மல்லி நக்கலடிப்பதாக பேச , தனம் நான் காபி கொடுக்கிறேன் என சொல்கிறார். உடனே முல்லையிடம் மல்லி இதெல்லாம் உனக்கு தேவையா என கேட்க, உனக்கு என்ன என முல்லை சத்தம் போடுகிறார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மறுபக்கம் மூர்த்தி, ஜீவா, கதிர் சூப்பர் மார்க்கெட்டில் உள்ள பொருள்களை எல்லாம் எடுத்து வைக்கின்றனர். எவ்வளவு ஆசையாக கடையை திறந்தார்கள். ஆனால் இப்படி ஆகிவிட்டதே என நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே பொருள்களை எல்லாம் எடுத்து வைக்கின்றனர். எல்லாத்தையும் லாரியில் ஏற்ற, உடனே ஜனார்த்தனன் தூரத்தில் இருந்து பார்த்து சந்தோசப்படுகிறார். அண்ணன் தம்பிகள் சூப்பர் மார்க்கெட்டை பார்த்து வருத்தப்படுகிறார்.

பின் கஸ்தூரி மல்லி ஜனார்தனனை பார்க்க வருகிறார். அப்போது நிச்சயதார்த்தம் பற்றி பேசுகின்றனர். நிச்சயத்திற்கு ஏற்பாடு எல்லாம் செய்ய வேண்டும் சேலை எடுக்க வேண்டும் என மல்லி சொல்ல, எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என ஜனார்த்தனன் சொல்கிறார். மாப்பிள்ளையை அழைத்து கொண்டு நீங்க வந்தால் போதும் என சொல்ல, கலை இவர் இப்படி தான் என சொல்கிறார். என்னாச்சு என ஜனார்த்தனன் கேட்க, மல்லி அதெல்லாம் சரியாக வராது என சொல்கிறார். அப்போது கஸ்தூரி அந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை போயிருச்சாம் என சொல்ல, ஜனார்த்தனன் நக்கல் அடித்து சிரிக்கிறார்.

அந்த கண்ணன் பேங்கில் என் நண்பரின் மனைவியை மாட்டிவிட்டார். அதனால் பழி வாங்க தான் இப்படி செய்ய சொன்னதாக சொல்லி சிரிக்கிறார். கஸ்தூரி எல்லா பிரச்சனைக்கும் நீ தான் காரணமா என நினைக்கிறார். என்ன செய்தாலும் அந்த குடும்பத்தை பிரிக்க முடியாது என சொல்ல, உடனே ஜனார்த்தனன் எப்படியாவது மீனாவை வர வைப்பேன் என சொல்கிறார். உடனே மல்லி அப்படியே முல்லை வந்துவிட்டால் நன்றாக இருக்கும் என சொல்கிறார். பின் அந்த மூர்த்தி தனியாக இருந்து கஷ்டப்பட வேண்டும் என ஜனார்த்தனன் சொல்கிறார்.

தமிழகத்தில் இன்று (டிச. 14) இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!

மறுபக்கம் மூர்த்தி கடையில் இருந்து வீட்டிற்கு வருகிறார். வீட்டில் தனம் மட்டும் இருக்கிறார். என்ன ஆச்சு என தனம் கேட்க, உடனே மூர்த்தி ஒன்றும் ஆகவில்லை என சொல்கிறார். அப்போது தம்பிகள் எப்படி இருக்காங்க என கேட்க, அவங்க சிங்கம் தைரியமாக இருப்பார்கள் என சொல்கிறார். மற்றவர்கள் எங்கே என மூர்த்தி கேட்க, ஹோட்டல் சென்று இருப்பதாக சொல்கிறார். அப்போது மீனா வர, ஹோட்டல் பற்றி கேட்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!