கடையை நினைத்து வருத்தப்படும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” குடும்பம்.. குத்திக்காட்டி பேச வரும் கஸ்தூரி – இன்றைய எபிசோட்!

0
கடையை நினைத்து வருத்தப்படும்
கடையை நினைத்து வருத்தப்படும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" குடும்பம்.. குத்திக்காட்டி பேச வரும் கஸ்தூரி - இன்றைய எபிசோட்!
கடையை நினைத்து வருத்தப்படும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” குடும்பம்.. குத்திக்காட்டி பேச வரும் கஸ்தூரி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி பழைய கடையை திறக்கலாம் என ஐடியா சொல்ல, உடனே பொருள்களை எல்லாம் வண்டியில் வருத்தப்பட்டு ஏற்றி விடுகின்றனர்.மறுபக்கம் கடையை நினைத்து தனம் வருத்தப்படுகிறார். பின் மல்லி மற்றும் கஸ்தூரி குடும்பத்தின் நிலைமையை சொல்லி கிண்டல் செய்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், குடும்பத்தில் அனைவரும் கடையை நினைத்து வருத்தமாக இருக்க, உடனே கண்ணன் நான் எல்லாம் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். உடனே மீனா முல்லை கிண்டல் செய்ய, அண்ணன் ஒருவர் சம்பாரித்து நாம எல்லாரும் வாழவில்லையா, அது போல நான் சம்பாரித்து எல்லாரையும் பார்த்துக் கொள்கிறேன் என சொல்ல, உடனே முல்லை அப்போ நீங்க எல்லாரும் சின்ன பசங்களாக இருந்தீர்கள், இப்போது அப்படி இல்லையே என சொல்கிறார். பின் ஐஸ்வர்யா அவன் எதோ ஆசையில் சொன்னதாக சொல்கிறார். பின் கண்ணன் கிளம்ப மூர்த்தி கடைக்கு கிளம்புகிறார்.

Follow our Instagram for more Latest Updates

பின் தனத்தை ஹோட்டலிற்கு கூப்பிட ஆனால் தனம் நான் அப்பறமாக வருகிறேன் என சொல்கிறார். நான் கொஞ்சம் நேரமாக வருகிறேன் என சொல்ல, பின் தனம் கடையை நினைத்து வருத்தப்பட்டு அழுகிறார். மற்றவர்கள் அவருக்கு ஆறுதல் சொல்ல, ஆனால் தனம் நமக்கு ஏன் இவ்வளவு கஷ்டம் என கேட்கிறார். மீனாவும் நமக்கு ஏன் இவ்வளவு கஷ்டம் என நினைத்து அழுகிறார். மறுபக்கம் மூர்த்தி ஜீவா கதிர் கடையில் உள்ள பொருள்களை எல்லாம் வருத்தப்பட்டு எடுத்து வைக்கின்றனர். அப்போது கடையை திறக்க எவ்வளவு ஆசைப்பட்டோம் என நினைக்கின்றனர். எல்லா பக்கமும் சென்று கடையை பார்க்கின்றனர். அப்போது மூர்த்தி நாம எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஒன்றாக தான இருக்கோம், திரும்ப வருவோம் கண்டிப்பாக என சொல்கிறார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பாக்கியா.. கொண்டாடும் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!

Exams Daily Mobile App Download

சரவணன் கடை இல்லை என்றால் என்னை வேலை விட்டு அனுப்பி விடுவீர்களா என கேட்க இல்லை என கதிர் சொல்கிறார். அண்ணாச்சியும் இப்படி செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் நன்றாக இருக்கமாட்டார்கள் என சொல்கிறார். மறுபக்கம் எல்லாரும் பொருள்களை எடுத்து வைக்க, நாம மீண்டும் நன்றாக வருவோம் என கதிர் சொல்கிறார். இந்த கடை இல்லாமல் இருந்தாலும் நாம அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் அது போதும் என மூர்த்தி சொல்கிறார். பின் கஸ்தூரி மல்லி தனத்தை பார்க்க வருகின்றனர். அப்போது கஸ்தூரி என்ன குடும்பத்துடன் அழுது கொண்டு இருக்கீங்க போல என மீண்டும் நக்கல் அடிப்பது போல பேசுகிறார். மல்லி அடுத்து என்ன செய்ய போறீங்க என நக்கலாக சிரிக்கிறார். கடையே இல்லாமல் எல்லாரும் எங்கே போயிருக்காங்க என கஸ்தூரி கேட்க, கடையை காலி செய்ய சென்று இருப்பதாக தனம் சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!