பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை மூட ஜனார்த்தனன் போட்ட திட்டம்.. குழப்பத்தில் மூர்த்தி – இன்றைய எபிசோட்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை மூட ஜனார்த்தனன் போட்ட திட்டம்.. குழப்பத்தில் மூர்த்தி - இன்றைய எபிசோட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை மூட ஜனார்த்தனன் போட்ட திட்டம்.. குழப்பத்தில் மூர்த்தி - இன்றைய எபிசோட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை மூட ஜனார்த்தனன் போட்ட திட்டம்.. குழப்பத்தில் மூர்த்தி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் பேங்க் மேனேஜரை மாட்டி விட்டதால் எப்படி எல்லாம் பழி வாங்கலாம் என ஜனார்த்தனன் பேசிக் கொண்டிருக்கின்றனர். பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை மூட வைக்க வேண்டும் என ஜனார்த்தனன் ஐடியா கொடுக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜனார்த்தனன் அந்த பேங்க் மேனேஜர் உடன் சேர்ந்து எப்படியாவது அந்த கண்ணனை பழி வாங்க வேண்டும் என பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த பேங்க் மேனேஜரின் கணவர் அந்த பையனை எதுவும் செய்யவே முடியவில்லையே என புலம்புகிறார். உடனே அவனை அடித்தால் அவங்க அண்ணங்கள் எல்லாரும் சண்டைக்கு வருவார்கள் என மீனாவின் அம்மா சொல்கிறார். அப்போது ஜனார்த்தனன் அவர்களை தனி தனியாக அடிக்க முடியாது, ஆனால் நீ நினைத்தால் கடையை மூடலாம் என சொல்கிறார். உடனே அந்த ஆள் அரசியல்வாதியால் என்ன செய்ய முடியும் என கேட்க, ஜனார்த்தனன் கடைக்கு பிரச்சனை உண்டு செய்தால் கண்டிப்பாக எல்லாம் நடக்கும் என சொல்கிறார்.

Follow our Instagram for more Latest Updates

மறுபக்கம் முல்லை ஹோட்டலிற்கு காய்கறி எல்லாம் வெளியே வாங்கி கொள்ளலாம் என பேசிக் கொண்டிருக்கின்றனர். கதிர் நான் சென்று காய் வாங்கி வருகிறேன் என சொல்கிறார். ஆனால் தனம் நீ கடையை மட்டும் பார்த்தால் போதும் என சொல்கிறார். பின் மூர்த்தி நீங்க எல்லாரும் இவ்வளவு கஷ்டப்பட்டு ஹோட்டல் வேலையை செய்ய வேண்டாம் என சொல்ல, தனம் எங்களுக்கு கஷ்டம் எதுவும் இல்லை என சொல்கிறார். ஆனால் மூர்த்தி கடையை கவனிப்பதால் பிரச்சனை வரும் என சொல்ல, கதிர் அதெல்லாம் நாம சமாளித்துக் கொள்ளலாம் என சொல்கிறார்.

பாக்கியாவிற்கு எதிராக ராதிகாவை தேர்தலில் நிற்க வைக்கும் கோபி.. மக்களின் ஆதரவு யாருக்கு? இன்றைய எபிசோட்!

பின் மூர்த்தி எதோ பண்ணுங்க என சொல்கிறார். மறுபக்கம் மூர்த்தி ஜீவா கதிர் கடையில் அண்ணாச்சியிடம் பேசி கிண்டல் செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது அலுவலர் ஒருவர் வந்து கடை யாரோடது என கேட்கிறார். பின் மாடிக்கு சென்று பார்க்க, மூர்த்தி என்ன ஆச்சு என தெரியாமல் இருக்கிறார். அப்போது ஜீவா என்ன பிரச்சனை என கேட்க, உடனே அந்த ஆபிசர் இது விவசாய நிலம் இங்கே கமர்சியல் கட்டிடம் கட்ட கூடாது என சொல்கிறார். உடனே ஜீவா எல்லாம் அனுமதி வாங்கி தான் காத்திருப்பதாக சொல்லி பேப்பர் எடுத்து காட்டுகிறார். ஆனால் அந்த ஆபிசர் அதெல்லாம் எனக்கு தெரியாது உடனே கடையை காலி செய்ய வேண்டும் என சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!